பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுத்த நடிகை – இனி சீரியல் சூப்பர் தான் போங்க.

0
1031
baagyalakshmi
- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் களம் இறங்கிய நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோசியல்மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருப்பது பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரில் இவர்களுடன் ரேஷ்மா, விஷால், ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை, சுயமரியாதை இருக்க வேண்டும் என்றும், பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதையும் பாக்கியா கதாபாத்திரம் உணர்த்துகிறது. அதிலும், கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம், சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் பாக்கியா கோபியிக்கு விவாகரத்து கொடுத்து விடுகிறார். நீதிமன்றமும் இவர்கள் இருவருக்குமே விவாகரத்து கொடுத்து விடுகிறது. கோபியின் வீட்டிற்கு பாக்கியா வருகிறார். பின் கோபி தகாத வார்த்தைகளால் பாக்கியாவை திட்டுகிறார். ஆனால், பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். கோபியின் மொத்த குடும்பமே பாக்கியாவை நிற்க வைத்து கேள்வி கேட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

சீரியலில் நடக்கும் திருப்பங்கள்:

இறுதியாக கோபி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். ஆனால், வீட்டில் உள்ள எல்லோரும் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்கள். பின் கோபி ராதிகாவின் வீட்டிற்கு சென்று, என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள் என்று நாடகமாடுகிறார். இதனால் ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வாரா? பாக்கியா ஒரே வருடத்தில் 40 லட்சம் திருப்பி தருவதாக சொன்ன சவாலில் ஜெயிப்பாரா? என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

சீரியலில் என்ட்ரி ஆகும் அமிர்தா ரோல்:

அதாவது, சீரியலில் அமிர்தா என்ற கதாபத்திரத்தில் ரித்திகா நடித்திருந்தார். சில மாதங்களாகவே பாக்கியா-கோபி விவகாரம் அதிகமாகி கொண்டிருந்ததால் அமிர்தாவின் கதாபாத்திரமே சீரியலில் காண்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் அமிர்தா ரோல் கதையில் வந்திருக்கிறது. மேலும், பாக்கியா மற்றும் அமிர்தா படபிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இனி வரும் காலங்களில் எழிலுடன் அமிர்தாவும் பாக்கியாவிற்கு உறுதுணையாக நின்று சவாலில் ஜெயிக்க போகிறார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement