புதிய படத்தில் கமிட்டான பாக்கியா – அதுவும் யார் படத்தில் பாருங்க – ஷூட்டிங் ஸ்பாட் கிளிக்ஸ் இதோ.

0
897
baagyalakshmi
- Advertisement -

பாக்யலக்ஷ்மி சீரியல் நடிகைக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா, வேலு லட்சுமணன், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குநர் டேவிட் என்பவர் இயக்கி வருகிறார். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் குடும்பத்தை பார்த்துக் கொண்டாலும் தனக்கு என்று ஒரு வேலை இருக்க வேண்டும்.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. இந்த சீரியல் மூலம் பாக்கியாவிற்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் சேர்ந்து உள்ளது. மேலும், சீரியல் உச்ச கட்ட பரபரப்பில் எட்டி வருகிறது. அதிலும் கடந்த சில வாரமாக பாக்கியலட்சுமி சீரியலின் டிஆர்பி எகிறிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த திருப்பங்கள் அரங்கேறி கொண்டு இருப்பது தான்.

சீரியலின் கதை:

அதாவது, கோபி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கோபி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து விட்டது. கோபி காதலிக்கும் நபர் ராதிகா என்ற உண்மை பாக்கியாவிற்கு தெரிந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியப்படுத்தி பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதனால் கோபி வீட்டில் புயல் அடித்தது போல் இருக்கிறது. தற்போது சீரியலில் வீட்டில் உள்ள எல்லோரும் பாக்கியாவை வீட்டிற்கு வரச் சொல்லி அழைக்கிறார்கள். ஆனால், பாக்கிய வரமுடியாது என்று சொல்லி விடுகிறார்.

-விளம்பரம்-

சீரியலில் வரும் திருப்பங்கள்:

இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சோகத்தில் இருக்கிறார்கள். ராதிகாவின் வீட்டிற்கு சென்று அனைத்து உண்மைகளையும் சொல்கிறார் பாக்கியா. ராதிகா அதிர்ச்சியில் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், பாக்கியா திரும்பி வந்து விடுகிறார். ராதிகா என்ன செய்ய போகிறார்? கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா? பாக்கியா எடுக்கும் முடிவு என்ன? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

சுசித்ரா நடிக்கும் படம்:

இந்தநிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு பட வாய்ப்பு கிடைத்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சீரியலில் பாக்கியாவாக நடித்துவரும் சுசித்ராவுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தற்போது இவர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் தமிழ், கன்னட மொழியில் உருவாகிறது. படத்தின் போது சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சுசித்ரா ‘சைவம்’ படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement