பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகிய மருமகள் – இனி அவருக்கு பதில் இந்த நடிகையாம்.

0
1818
- Advertisement -

பாக்யலக்ஷ்மி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ரா நடிக்கிறார். இவரை தொடர்ந்து இந்த தொடரில் சதீஸ், ரேஷ்மா, நேகா, விஷால் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது.

- Advertisement -

பாக்கியலட்சுமி சீரியல்:

தற்போது சீரியலில் இனியா-பாக்கியா கல்லூரி ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது. அதாவது, இனியா 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீடியா சம்பந்தப்பட்ட கல்லூரியில் சேர்ந்து விடுகிறார். பின் பாக்யா எழியிடம் கல்லூரி படிப்பது குறித்து பேசுகிறார். அதற்கு எழில் உதவி செய்கிறார். பின் இதை வீட்டில் உள்ள எல்லோரிடமும் பாக்கியம் சொல்கிறார். இதனால் அனைவரும் பாக்கியா கல்லூரிக்கு செல்ல சம்மதம் சொல்கிறார்கள்.

சீரியலின் கதை:

ஆனால், இனியாவிற்கு மட்டும் இதில் விருப்பமில்லை. இதை அவர் கோபியிடம் சொல்ல வழக்கம்போல் கோபி புலம்புகிறார். அதோடு பழனிசாமியை பாக்கியாவிற்கு திருமணம் செய்து வைக்க பழனிச்சாமி அம்மா ஆசைப்படுகிறார். இன்னொரு பக்கம் கேண்டினில் செல்வி சமையலில் சுதப்பி விடுகிறார். இதை பார்த்த ராதிகா கோவப்பட்டு கேண்டின் ஆர்டரை கேன்சல் செய்யப் போகிறார். பாக்யா எவ்வளவு கெஞ்சியும் ராதிகா ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்து பாக்யா அழுகிறார்.

-விளம்பரம்-

முக்கிய நடிகை விலகல்:

இனி பாக்கியாவின் கேண்டீன் ஆர்டர் கையை விட்டுப் போகுமா? தன்னுடைய கனவை பாக்கியா நிறைவேற்றுவாரா? பழனிச்சாமி எடுக்கும் முடிவு என்ன? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் செல்ல இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து பிரபல நடிகை விலக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகா நடித்து வந்தார்.

அமிர்தா ரோலில் நடிப்பவர்:

இவர் சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது அமிர்தா உடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சீரியலில் இருந்து ரித்திகா விலகுகிறார். காரணம் என்ன என்று தெரியவில்லை. அமிர்தா ரோலில் தற்போது நடிகை அக்ஷிதா நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் இவரை மக்கள் ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement