17 வயதில் கல்யாணம் பண்ணேன், அவர் வீட்டுக்கு சென்ற பின் தான் நான் 4வது மனைவின்னு சொன்னார் – பேபி அஞ்சு வாழ்க்கையில் நடந்த சோகம்.

0
3220
babyanju
- Advertisement -

தன்னுடைய திருமணம் வாழ்க்கை குறித்து மனவேதனையுடன் நடிகை பேபி அஞ்சு அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 80,90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பேபி அஞ்சு. இவர் இரண்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். 1979 ஆம் ஆண்டில் வெளிவந்திருந்த உதிரி பூக்கள் என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகை ஆனார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பின் கதாநாயகியாகவும் இவர் சில படங்களில் நடித்த இருக்கிறார். ஆனால், இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே நடிகை பேபி அஞ்சு அவர்கள் கன்னட நடிகர் டைகர் பிரபாகரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் ஒரே வருடத்தில் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகன் இருக்கிறார்.

- Advertisement -

பேபி அஞ்சு அளித்த பேட்டி:

தற்போது பேபி அஞ்சு அவர்கள் தொலைக்காட்சி தொடர்களிலும், அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஷகிலா நடத்தி வரும் நிகழ்ச்சியில் பேபி அஞ்சு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து குறித்து கூறி இருந்தது, டைகர் பிரபாகரன் வயதில் என்னை விட மிகப்பெரியவர். சொல்லப்போனால், என்னுடைய அப்பாவை விட அவர் பெரியவர் என்று சொல்லலாம்.

பேபி அஞ்சு – பிரபாகரன் திருமணம்:

இதனால் தான் பலரும் என்னை திட்டினார்கள். என் மீது கோபப்பட்டார்கள். நான் தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போது கன்னடத்தில் அவர் மிக பிரபலமான நடிகராக இருந்தார். அப்போது அவருடைய படத்தில் நடிக்கும் போது அவரைப் பற்றி பயங்கரமாக புகழ்ந்து தள்ளுவார்கள். அப்போது எனக்கு வெறும் 17 வயது தான். எப்படியோ நான் அவருடைய காதல் வலையில் சிக்கி விட்டேன். அது திருமணம் என்று சொல்ல முடியாது. ஒரு ஒன்றரை வருடம் மட்டும் நான் அவருடன் இருந்தேன். அவ்வளவுதான் அவருக்கு ஒரு மகள் இருந்தது எனக்கு தெரியும்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சொன்னது:

பின் திருமணம் செய்து கொண்டு அவருடைய வீட்டிற்கு போனால் அங்கே என் வயதை விட அதிகமான வயதில் இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களெல்லாம் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அப்போது என்ன சொல்லுவது? எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியவில்லை. இது குறித்து பிரபாகரனிடம் கேட்டால் ஆமாம் அவர்கள் என் பிள்ளைகள் என்று சொன்னார். அப்பயே நான் மனமுடைந்து போய் விட்டேன். அப்போதுதான் நான் அவருக்கு நான்காவது மனைவி என்று தெரிந்தது. நாம் எடுத்த முடிவு நம் வாழ்க்கையை நாம் தான் தீர்மானித்தோம். எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று அவருடன் வாழ்ந்தேன்.

கணவனை விட்டு பிரிந்தது:

அப்போது நான் நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன். பின் படத்தில் நடிக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதனால் எங்களுக்குள் சின்ன சின்ன வாக்குவாதங்கள் சென்று கொண்டது. ஒரு கட்டத்தில் மிகப்பெரிய சண்டை வெடித்து நான் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து விட்டேன். அப்போது என் மகன் அர்ஜுன் 3 மாத குழந்தை. ஒரு மூன்று நாட்கள் கழித்து அவர் நீ இல்லாமல் வாழ முடியாது வா என்று சொன்னார். நான் கண்டிப்பாக உங்களுடன் வர முடியாது. என் மகனை உன்னைவிட என்னால் நன்றாக வளர்க்க முடியும் என்று சொல்லி விட்டேன். பின் இரண்டு வருடங்கள் கழித்து பிரபாகரன் இறந்த தகவல் வந்தது. அதற்கு கூட நான் செல்லவில்லை. அந்த அளவிற்கு நான் மன வேதனையில் இருந்தேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement