பகுத்தறிவு பேசுறீங்க, ஆனா சாமி கும்பிடுறிங்கன்னு கேட்பாங்க – பிக் பாஸ் முத்துக்குமரன் கொடுத்த விளக்கம்

0
239
- Advertisement -

பகுத்தறிவு குறித்து பிக் பாஸ் முத்துக்குமரன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக சமீபத்தில் தான் முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். அதன் பின் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் ராயன் தான் வெற்றி பெற்றார்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

மேலும், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக இந்த பணப்பெட்டி டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருந்தார்.
இந்த டாஸ்க்கில் ராயன், முத்துக்குமரன், விஷால், பவித்ரா ஆகியோர் பணப்பெட்டி டாஸ்க்கை விளையாடி வெற்றி பெற்று விட்டார்கள். ஆனால், ஜாக்குலின் தான் இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்திருந்தார்.
இவரின் எலிமினேஷன் எல்லோருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் grand finale சுற்று நடந்து இருந்தது.

டைட்டில் வின்னர்:

முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நன்றி தெரிவித்து முத்துக்குமரன் வீடியோ போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

முத்துக்குமரன் வீடியோ:

இப்படி இருக்கும் நிலையில் பகுத்தறிவு தொடர்பாக முத்துக்குமரன் பதிவிட்ட வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், நான் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த உடனே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போகணும் என்று நினைத்தேன். நிறைய பேர் என்னிடம், நீங்கள் பகுத்தறிவு பேசுகிறீர்கள், முற்போக்காக இருக்கிறீர்கள், அப்படி இருந்தும் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவது எப்படி? என்று கேட்கிறார்கள். நான் ரொம்ப ஆழமாக நம்புறது எப்பவுமே நேர்மறையாக இருக்கணும் என்ற விஷயத்தை தான்.

பகுத்தறிவு பற்றி சொன்னது:

வெளியில் நம்பினால் நிறைய சிக்கல் வரும். ஆனால், நம்மை நம்பினால் எந்த பிரச்சினையும் இல்லை. நமக்கு மேல ஏதாவது ஒரு சக்தி இருக்குன்னு வைத்துக் கொள்வோம். இயற்கை, பிரபஞ்சம், அம்மா- அப்பா, கடவுளை என்று நம்பினால் நமக்கு வேகமாகவும் கடினமாகவும் உழைக்க முடியும் என்று நம்புகிறேன். அதனால் நமக்கு மேல நம்பிக்கை என்பது இயற்கை, பிரபஞ்சம், கடவுளை என்று ஏதாவது ஒன்றை தான் சொல்லலாம். இது மதம் மற்றபடி வேற எந்த விஷயமும் கிடையாது. நமக்கு நம்மை நம்பனும், ஆழமாக நம்பனும். மற்ற விஷயங்களை என்னால் நம்ப முடியாது. தன்னை மட்டும் நம்புறேன் என்று உங்களைப் போல் வலிமையானவர் யாரும் கிடையாது என்று கூறுகிறார்.

Advertisement