நேற்று கூல் சுரேஷ், இன்று யார் எலிமினேஷன்? – பிக் பாஸ் கொடுத்த மிகப்பெரிய டிவிஸ்ட்.

0
477
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 76 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டது. அதோடு இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற்று இருந்தது.

- Advertisement -

இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறி இருக்கிறார். இதனால் மீதம் தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் இந்த வார நாமினேஷனில் தொடர்ந்தனர். இதில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது.

அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கிவிட்டார். இதைடுத்து கூல் சுரேஷை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து அவரின் செயலை கண்டித்த பிக்பாஸ், அறிவுரை கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூல் சுரேஷ், இனி இதுபோன்ற செயல்கள் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு சென்றார். பிக்பாஸ் வரலாற்றில் இதற்கு முன் முதல் சீசனில் பரணி இதுபோன்று சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

கூல் சுரேஷ் இப்படி செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவரை சேனலே வெளியில் அனுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக சனிக்கிழமை எலிமினேஷன் நடந்தாலே அது டபுள் ஏவிக்ஷனின் அறிகுறி தான். எனவே இந்த வாரமும் டபுள் ஏவிக்ஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் யாரும் வெளியேறவில்லையாம்.

nixen

கடந்த வாரமே நிக்சன் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தார். மேலும், பல தனியார் வலைத்தளங்களில் நடந்து வந்த ஓட்டிங்கிலும் அவருக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்தது. ஆனால், ஆனால், கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டுஇருந்தது. இதுகுறித்து அறிவித்த விஜய் டிவி ‘மிக்ஜாம் புலன் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்க இயலாததால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement