‘வெண்கல பானை’ முதல் சில நாள்களிலேயே அஸீமை கேலி செய்யும் நெட்டிசன்கள். ஏன் தெரியுமா ?

0
570
- Advertisement -

பிக் பாஸ் வீட்டு வெண்கல பானை என்று அசிமை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி மூன்று நாட்கள் ஆகி விட்டது. இந்த முறை நிகழ்ச்சி ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

வழக்கம் போல் கமல் தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

நிகழ்ச்சி தொடக்கத்தில் போட்டியாளர்கள் குறித்து கூறப்பட்டு இருந்தது. இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கி விட்டது.

முதல் நாள் நாமினேஷன்:

எப்போதுமே நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழித்து தான் போட்டியாளர்களுக்குள் சர்ச்சை, சண்டை, கலவரம் தொடங்கும். ஆனால், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்கள் கலவரத்தை ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வீடு சந்தை கடை போல் மாறிவிட்டது. மேலும், இந்த முறை முதல் நாளிலேயே பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து ஆரம்பித்திருக்கிறார். அதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை அதிகம் கவராத மூன்று பேர்களை கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் கலவரம்:

இதனை அடுத்து அதிக வாக்குகளை பெற்று ஆயிஷா, சிவின் கணேஷ், ஆர் ஜே மகேஸ்வரி, அமுதவாணன் ஆகிய நான்கு பேரும் தான் அடுத்த வாரம் நாமினேஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த முறை கேப்டன் தேர்வு நடைபெறவில்லை. அதற்கு பதில் போட்டியாளர்களை நான்கு அணியாக பிரித்து வேலையை பார்த்து வருகின்றனர். இதனால் அடிக்கடி போட்டியாளர்களுள் சண்டை ஏற்படுகிறது. இந்த நிலையில் சமையல் டீமில் பல கலவரம் நடந்திருக்கிறது. அந்த வகையில் மகேஸ்வரி சமையல் செய்து கொண்டிருக்கும் போது அசிமுக்கும் மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அசிம் குறித்த மீம்ஸ்:

இதனால் இதுவரும் சண்டை போட்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து ரசிகர்கள் அசிமை ஆழமாக கவனித்து வருகிறார்கள். அவர் டாஸ்கின் போது ஒரு மாதிரியாகவும், போட்டியாளர்களிடம் வளவளவென்று பேசிக்கொண்டும் இருப்பதால் அவரை முதல் நாளிலிருந்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நெட்டிசன்கள் அவரை பிக் பாஸ் வீட்டிற்கு புகுந்த வெண்கல பானை என்று கிண்டல் செய்த மீம்ஸ்களை போட்டு அசிமை வறுத்தெடுத்த வருகின்றனர். அது மட்டுமில்லாமல் கடந்த சீசனில் அபிஷேக் ராஜா போல் இந்த முறை அசிம் இருக்கிறார் என்றும், அதனால் அசிம் சீக்கிரமாகவே பிக் பாஸை விட்டு வெளியேறுவார் என்றெல்லாம் கூறியிருக்கின்றனர்.

Advertisement