பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின் தன் ரசிகர்களுக்கு சிபி சொன்ன முதல் விஷயம். வைரலாகும் பதிவு.

0
314
ciby
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சிபி முதன் முறையாக தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி 94 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் நேற்று வரை பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருந்தனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகிஇருந்தனர் . இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

-விளம்பரம்-

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது . கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருந்தார் சரத் குமார். மேலும், அந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் 5 , 6, 7, 8, 10, 11 லட்சம் என்று படிப்படியாக தொகை ஏறிக்கொண்டே போனது.

- Advertisement -

12 லட்சத்துடன் வெளியேறிய சிபி :

இப்படி ஒரு நிலையில் நேற்று 12 லட்ச ரூபாய் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார் சிபி. மேலும், நிரூப் சொன்னது போல இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்கா தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், பாவனி, தாமரை, அமீர் ஆகிய மூவரில் அமீர் நேரடியாக பைனலுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சியிருப்பது நிரூப் மற்றும் சிபி இருவரும்தான். வரும் வாரத்தில் எப்படியும் ஒருவர் வெளியேறி ஆக வேண்டும். எனவே, தானோ அல்லது நிரூப்போதான் எவிக்ட் ஆவோம் என நினைத்து சிபி இந்த முடிவை எடுத்தாரோ என்பது பலரின் கேள்வி.

சிபி சொன்ன காரணம் :

மேலும், இந்த பெட்டியை எடுப்பதற்கு முன்பாக தாமரையிடம் மட்டும் பல முறை கேட்டார் சிபி. ஆனால், தாமரை தனக்கு அந்த பணம் வேண்டாம் என்று சொன்ன பிறகே சிபி, பெட்டியை எடுத்துக்கொண்டார். இருப்பினும் சிபியின் இந்த முடிவை போட்டியாளர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்ட போது நான் வரிசைபடுத்தும் டாஸ்கில் மிகுந்த நம்பிக்கையுடன் தான் முதல் இடத்தில் நின்றேன். அந்த நம்பிக்கை இப்போ எனக்கு இல்லை. இப்போது எனது தன்னம்பிக்கை குறைந்துவிட்டது. இதற்கு பின் இந்த வீட்டில் வெற்றி பெறுவேன் என்று பொய்யாக நடித்து என்னால் இருக்க முடியாது என்று குறி இருந்தார்.

-விளம்பரம்-

சிபியின் முதல் பதிவு :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிபி முதன் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இது மிகவும் ஒரு அற்புதமான பயணம். இப்படி ஒரு மதிப்புமிக்க மேடையில் எனக்கு கலந்துகொள்ள வாய்ப்பை கொடுத்த பிக் பாஸ், விஜய் டிவி, ஹாட் ஸ்டாருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், கமல் சாருக்கும் நன்றி. நீங்கள் வாரம் முழுதும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த 95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததை நினைத்து நான் எப்போதும் மகிழ்ச்சி அடைவேன்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிபி :

மிகவும் அற்புதமான நபர்கள் மூலம் எனக்கு நம்ப முடியாத அனுபவங்கள் கிடைத்தது. நான் அவர்கள் அனைவருக்கும் செல்ல விரும்பும் விஷயம் என்னவென்றால் நாம் அனைவரும் தனித் தன்மை கொண்டவர்கள், அனைவரும் வெற்றியாளர்கள் தான். எனக்கு வாக்களித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் காட்டிய அன்பு, ஆதரவு. ட்ரீட் என்று அனைத்தின் மூலம் உங்களின் ஆதரவை எனக்குக் கொடுத்து உள்ளீர்கள். நீங்கள் என்னை ஒரு சிறந்தநபராக மாற்ற விரும்பினீர்கள், வரும் காலங்களில் அதற்காக நான் நிச்சயம் உழைப்பேன். அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement