‘மாணவன் டூ அப்பா’ – கவின் நடித்துள்ள ‘டாடா’ எப்படி – முழு விமர்சனம் இதோ.

0
892
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு சென்று தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் நடிகர் கவின். தற்போது இவர் நடித்துள்ள “டாடா” படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை கணேஷ் கே பாபு அறிமுக இயக்குனராக படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் இப்படத்திற்கு ஜென்மார்ட்டின் இசையமைத்துள்ளார். கவின் இப்படத்தில் மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணாதாஸ். மேலும் பாக்யராஜ், ஐஸ்வர்யா ஐஸ்வர்யா லட்சிமி போன்ற பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தந்தை மகன் பாசத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த “டாடா” படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கதைக்களம் :

இப்படத்தில் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் ஊதாரியாக சுற்றும் ஒரு கல்லூரி மாணவராக மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் கவின் வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் சிந்து என்ற பெண்ணுடன் நெருங்கி பழகி வருகிறார் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர் இந்த காதல் ஒரு கட்டத்தில் கர்ப்பமாக மாறுகிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் க்வின் திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே பொறுப்பில்லாமல் சுற்றுகிறார். இதனை பார்த்த சிந்து வருத்தமடைகிறார். இப்படி இருக்கும் நேரத்தில் ஒரு சண்டை வருகிறது.

- Advertisement -

அந்த சண்டையில் “நீ செத்துரு” என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கதாநாயகன். இப்படி செல்லும் நேரத்தில் சிந்துவிற்கு கர்ப்ப வலி வந்து மணிகண்டனுக்கு போன் செய்கிறார். இந்த அழைப்பை கண்டு கொள்ளாமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுக்கிறார். இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் அதனை மருத்துவமனையில் விட்டுவிட்டு சிந்து தன்னுடைய தாயின் வீட்டிற்கு செல்கிறார். இப்படி செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ளவும் மிகப்பெரிய பொறுப்பு மணிகண்டனிற்க்கு வருகிறது. இந்த நிலையில் குழந்தையை வளர்க்கும் மணிகண்டன் திருந்தினாரா? குழந்தையை நல்ல படியாக வளர்த்தார? மீண்டும் தன்னுடைய மனைவியை சந்தித்தாரா? என்பதுதான் மீதி கதை.

இப்படத்தில் தந்தை மகன் பாசத்தில் பிச்சு உதறி இருக்கிறார் கவின். அதே போல தாயாக வரும் அபர்ணாவும் தன்னுடைய நடிப்பினால் மக்களை கவர்ந்திருக்கின்றார். இருந்தாலும் நாயகி அபர்ணாவுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. மேலும் இப்படத்தில் சில கஷ்டமான நேரங்களில் சிரிப்பு எனும் மேஜிக்கை தூவும் பஞ்ச் கதாபாத்திரமாகவும், அறிவுரை சொல்லும் கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார் விடிவி கணேஷ்.

-விளம்பரம்-

மேலும் இப்ப இடத்திற்கு வரும் பாக்கியராஜ் ஐஸ்வர்யா கதாபாத்திரங்கள் இருவரும் சில நிமிடங்களே கதையில் வந்தாலும் எப்போதும் போல பாக்கியராஜ் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். படத்தில் பல காட்சிகளை நாம் முன்கூட்டியே கணிக்க முடியும் என்றாலும் இந்த விஷயம் படத்திற்கு ஒரு எதிர்மறையாக இருக்கவில்லை என்பது திரைக்கதையை லாபகரமாக நகர்த்தியத்திற்க்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். மேலும் படம் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை.

குறை :

கிளைமாக்ஸ் காட்சியில் இன்னனும் கோசம் எமோஷன் சேர்த்தி இருக்கலாம்.

கதாநாயகியின் தாய் நடிப்பில் பாசம் சற்று குறைவாக இருக்கிறது.

நிறை :

படம் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை.

அறிமுக இயக்குனராக இருந்தாலும் திரைக்கதையை லாபகரமாக இயக்கி இருக்கிறார் கணேஷ் கே.பாபு.

கதாபாத்திரங்கள் நன்றாக நடித்திருக்கின்றனர்.

மொத்தத்தில் நிறைவான உணர்வை தரக்கூடிய தந்தை மகன் பாச போராட்ட படமாக “டாடா” படம் வந்திருக்கிறது.

Advertisement