Mr.திருமாவளவன் கால்ல என்ன இருக்கு பாத்தியா – காயத்ரி ரகுராமின் பழைய வீடியோவை பகிர்ந்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
487
Gayathri
- Advertisement -

சமீபத்தில் பாஜக கட்சியில் இருந்து காயதிரி ரகுமான் தர்க்காலிகமாக நீக்கப்பட்டதாக நிலையில் தற்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முழுவதுமாக பாஜகவை விட்டு வெளியேறி இருந்தார் காயத்ரி ரகுராம். பாஜக கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாட்டில் மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து வந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

-விளம்பரம்-

இவர் பாஜக கட்சியின் தமிழ் வளர்ச்சி துறையின் தலைவராக இருந்தாலும் காசி தமிழ் சங்கம் உட்பட பல நிகழ்ச்சிகளில் இவரை பாஜக ஒதுக்குவதாக குற்றம் சாட்டி வந்தார். அதோடு தங்கள் கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. மேலும் சமீபத்தில் நடந்த சூர்யா மற்றும் டெய்ஸி ஆபாச சர்ச்சை விவகாரம் பற்றி காயதிரி ரகுராம் போட்டிருந்த பதிவினால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

- Advertisement -

இந்நிலையில் சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்று அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். காயத்ரி ரகுராமை புத்தகம் வழங்கி அவரை தொல் திருமாவளவன் வரவேற்றார். இது குறித்த பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள காயத்ரி ரகுராம் ‛‛எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது விசிக தலைவர், எம்பி., அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி.

மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என தெரிவித்துள்ளார். இதேபோல், திருமாவளவனும் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காயத்ரி ரகுராம் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தார்” என போட்டோவுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதமாகி இருக்கிறது. காயத்ரி ரகுராமின் இந்த பதிவை தொடர்ந்து அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-

ஏற்கனவே பா ஜ க கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது பேசிய அவர் அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி என எந்த கட்சியில் இணைய கூப்பிட்டாலும் செல்வேன். ஆனால் எனக்கு பாதுகாப்பு தருவதாகவும் சுதந்திரமாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல காயத்ரி ரகுராமின் இந்த பேச்சை தொடர்ந்து விசிக தலைவரான திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காயதிரி ரகுராமை டேக் செய்து `பாஜக பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என ‘வால் பிராணன் தலைக்கு ஏற’ கத்திக்கொண்டே தானே இருக்கிறோம். இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக என்று காயதிரி ரகுராமிற்கு ஆதரவளிக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் திருமாவளவன்.

காயத்ரி ரகுராமனின் இந்த பதிவு தற்போது ட்விட்டரில் விவாதகமாக மாறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதாவது காயத்ரி ரகுராம் பா ஜ கவில் இருந்த போது ஒரு மேடையில் திருமாவளவன் பற்றி பேசி இருந்தார். அதில் ஏய் திருமாவளவன்? ஏய் திருமாவளவன்? என்று விரலை சுண்டி சுண்டி காலில் ஓன்று இருக்கிறது என்று பேசியிருந்தார். அந்த வீடியோவை தற்போது நெட்டிசன்கள் சுட்டி காட்டி கேலி செய்து வருகின்றனர்.

Advertisement