‘நான் வீட்டுக்கு போய் எங்க அம்மா கூட இருக்கேன் விட்ருங்க’ – ரவீனாவின் குத்தல் வேலையால் கதறி அழுத ஜோவிகா.

0
425
- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 8வது வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி,பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் 14 பேர் இருக்க பாஸ் வீட்டில் மேலும் 3 wild card போட்டியாளர்கள் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியாளர்களுக்கு மூன்று டாஸ்க் கொடுக்கப்படும், அதில் வென்றால் பிக் பாஸ் வீட்டில் தொடரலாம், தோற்றால் wild card போட்டியாளருக்கு வழிவிட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருந்தார் பிக் பாஸ்.

- Advertisement -

கடந்த வாரம் நடைபெற்ற மூன்று பூகம்ப டாஸ்கில் இரண்டு டாஸ்கில் போட்டியாளர்கள் தோற்றதால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உறுதியானது. அந்த வகையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா wild Card போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து இருக்கின்றனர். இவர்கள் இருவரின் வருகையில் டபுள் ஏவிக்ஷன் ஏற்பட்டது. இதில் பிராவோ மற்றும் அக்ஷ்யா வெளியேறினார்கள்.

இப்படி ஒரு நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில் அடுத்த வார தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளருக்கு வரும் கைத்தட்டல்களை பொறுத்தே தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த டாஸ்க்கில் விக்ரம் சென்று நின்ற போது அவருக்கு ஒருவர் கூட கைதட்டவில்லை. இதனால் அப்செட் அடைந்த விக்ரம் உத்தராவது கைதட்டுங்களேன் என்று பாவமாக கேட்டார்.

-விளம்பரம்-

இவரை போலவே ஜோவிகாவிற்கும் எந்த ஒரு கைதட்டலும் கிடைக்கவில்லை. மேலும், இந்த முறை கேப்டன் டாஸ்க் கிடைத்தால் நிச்சயம் தோற்காமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்று ஜோவிகா கூறிய போதும் யாரும் அவருக்கு அதரவு தெரிவிக்கவில்லை. இதனை தொடர்ந்து கூல் சுரேஷ், அர்ச்சனா ஆகி இருவருக்கும் ஆதரவு கிடைத்ததால் அவர்கள் தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மணி மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக் மட்டும் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மணி, ரவீனா இருவரும் ஜோவிகாவிடம் எப்படியும் நீங்கள் உங்கள் கேங்கிற்கு தான் சப்போர்ட் செய்வீர்கள் என்று சொன்னதால் அப்சட் ஆனார் ஜோவிகா. இதனால் தனியாக அமர்ந்து கொண்டு அழுத ஜோவிகா நான் வெளியில் சென்று என் அம்மவிடம் செக்கிறேன் என்று அழுதார். அப்போதும் ரவீனா, நான் உன்னை சொல்லவில்லை என்று ஜோவிகாவிடம் வாதிட்டு இருக்கிறார்.

Advertisement