வனிதாவின் பேச்சால் கடுப்பாகி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் செய்த ட்வீட்.!

0
19663
Vanitha
- Advertisement -

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பொம்மைக்காக ஆரம்பித்த சண்டை கலாச்சாரம் பேசும் அளவிற்கு போய்விட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் அபிராமிக்கு இடையே ஓடிக்கொண்டிருந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கவின் அபிராமிக்கு ஒரு வாட்டர் பாட்டிலை கொடுத்தார். 

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is sakshi-1024x575.jpg

அதனை தனது குழந்தை என்று பொத்தி பொத்தி பார்த்து வந்தார் அபிராமி. இந்த நிலையில் நேற்று (ஜூன் 30 ) கமல், அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேசி கொண்டிருக்கும் போது பாத்திமா செய்தி வாசிப்பாளராக வீட்டில் இருந்த அணைத்து போட்டியாளர்களையும் விவரித்து வந்தார்.

இதையும் பாருங்க : மதத்தால் சினிமாவில் இருந்து விலகிய தங்கள் பட குழந்தை நட்சத்திரம்.! காரணம் இது தானாம்.! 

- Advertisement -

அப்போது வாய் தவறி அபிராமி, கவினின் குழந்தையை வைத்திருக்கிறார் என்று என்னமோ கூறி விட்டார். ஆனால், அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் மதுமிதா இப்படி எல்லாம் செய்ய கூடாது நான் ஒரு தமிழ் பெண், எனக்கு தமிழ் கலாச்சாரம் தான் முக்கியம் என்று கூறிவிடுகிறார்.

-விளம்பரம்-

இந்த விஷயத்தில் மதுமிதாவை அனைவரும் டார்கெட் செய்து திட்டி தீர்த்தனர். எதற்காக சம்மந்தமே இல்லாமல் தமிழ் பெண் என்ற சொல்லை சொல்கிறார் என்று பலரும் கேள்வி கேட்க, வனிதாவோ வழக்கம் போல நாட்டாமை வேலையில் ஈடுபட்டார்.

அப்போது தமிழ் பெண் என்று சொல்கிறாயே நீ படத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டாயா அது தமிழ் கலாச்சாரத்திற்கு இழுக்கு இல்லையா என்று கேள்வி கேட்டார். அதே போல நீ படங்களில் எத்தனை ஆண்களுடன் சேர்ந்து நடிக்கிறாய் அதெல்லாம் தவறு இல்லையா என்று மதுமிதாவை ஒரு வாங்கு வாங்கிவிட்டார்.

மேலும், வனிதா மதுமிதாவிடன் தனிப்பட்ட வாழ்கை என்பது வேறு நடிப்பு என்பது வேறு என்று கூறியிருந்தார். வனிதாவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி ”என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement