ரஷிதா விஷயத்தை வைத்து தினேஷை டார்கட் செய்ய திட்டம் போடும் மாயா மற்றும் பூர்ணிமா. இதெல்லாம் கேவலமா இல்ல?

0
405
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 39 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். மேலும், முதல் நாளில் இருந்தே நிகழ்ச்சி அனல் பறந்து கொண்டு இருக்கிறது. அதேபோல் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் கடந்த சனிக்கிழமை பிரதீப் Red Card கொடுத்து வெளியேற்றப்பட்டார். காரணம், பிரதீப்பால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று வீட்டில் இருந்த பெரும்பாலான பெண்கள் கமலிடம் முறையிட்டததால் அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார் கமல். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிலும் பிரதீப் வெளியேற்றம் குறித்து பல சர்ச்சைகள் நடந்தது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக தினேஷ் என்ட்ரி ஆகி இருந்தார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தினேஷ். இவர் இவர் சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்திருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

அதுமட்டுமில்லாமல் இவர் சின்னத்திரை நடிகை ரக்ஷிதாவின் கணவர் ஆவார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கெடுத்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆகுவது என்னுடைய மனைவி ரக்ஷிதாவுக்கு தான் என்று பேட்டியில் கூட தினேஷ் கூறியிருந்தார். மேலும், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே தினேஷ் பெரிதாக எந்த சர்ச்சையிலையும் ஈடுபடவில்லை. ஆனால், மாயா- பூர்ணிமா செய்த வேலைகளை கண்டு கோபத்தில் தினேஷ் பேசியிருக்கிறார். அதேபோல் மாயா- பூர்ணிமா இருவரும் தினேஷை டார்கெட் செய்திருந்தார்கள்.

நிகழ்ச்சியில் தினேஷ்:

பின் நேற்று நடந்த டாக்கில் கூட தினேஷ், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி ஆண்களுக்கு அவமரியாதையாக நடக்கிறார்கள். உள்ளாடைகளை வைத்து நிக்ஸனை கிண்டல் செய்து பேசி இருந்தார்கள் என்று பூர்ணிமா- மாயா மீது வழக்கு தொடர்ந்தார். இறுதியில் இந்த வழக்கில் தினேஷ் வெற்றி பெற்றார். இதனால் கடுப்பான மாயா- பூர்ணிமா நேற்று நள்ளிரவில் தினேஷை டார்கெட் செய்ய வேண்டும். அவனை ஏதாவது பண்ணனும் என்று பேசி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மாயா-பூர்ணிமா செய்த வேலை:

அதற்கு மாயா, அவனுடைய மனைவி ரக்ஷிதா தானே என்று சொன்னவுடன் பூர்ணிமா அதை வைத்து என்ன பண்றது? என்று கேட்கிறார். உடனே மாயா, அதை பத்தி கேட்டு அவரைப் பேச வைக்கணும் என்று சொன்னவுடன் பூர்ணிமா, சரி ஓகே எனக்கு புரிந்து விட்டது என்று சொல்கிறார். மேலும், தினேஷை நாம டம்மியா வச்சுக்கணும். தினேஷ் எப்போதும் நம்ம சைடு தான் நிக்கணும். சண்டை போட்டாலும் அவன் நமக்காக நின்று தான் சண்டை போடணும் என்றெல்லாம் மோசமாக இருவரும் பேசி இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வெளியாகி இருக்கிறது.

தினேஷ்-ரக்ஷிதா சண்டை:

ஏற்கனவே தினேஷ்- ரக்ஷிதா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருவரும் சில வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக கூட செய்திகள் வந்தது. சில மாதங்களுக்கு முன்பு கூட போலீஸ் ஸ்டேஷனில் தினேஷ்- ரட்சிதா இருவரும் சண்டை போட்டு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்படி இருக்கும் சூழ்நிலையில் ரக்ஷிதாவை டார்கெட் செய்து தினேஷிடம் பேசலாம் என்று மாயா- பூர்ணிமா செய்திருக்கும் செயல் மோசமானது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement