இந்த மாதிரி பொண்ணுங்களால தான் மத்த பொண்ணுங்களுக்கு – மாயாவை வெளுத்து வாங்கிய கல்யாணி.

0
217
Maya
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி என்று பலர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

இந்த சீசனில் அதிகம் பேசப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தது மாயா மற்றும் பூர்ணிமா தான். ஆனாலும், இவர் இறுதி போட்டி வரை வந்தும் 2ஆம் இடம் பிடிக்கவில்லை என்பதே பலரின் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் எந்த red cardஐ கொடுத்து மாயா பிரதீப்பை அனுப்பினரோ அதே red card கட்டத்திற்குள் மாயா நின்று மாயா வெளியேற்றப்பட்டார் என்றெல்லாம் கூறி வந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் பிரதீப்பின் red card விஷயம் குறித்தும் மாயா குறித்தும் நடிகையும் தொகுப்பாளினியுமான கல்யாணி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். பிரதீப்பின் ரெக்கார்டு விஷயத்தை பார்த்தபோது நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த உலகத்தில் என்ன தான் நடக்கிறது என்பது போல ஆகிவிட்டது. இது போன்ற விஷயங்களால் தான் சமூகத்தில் பல பெண்களை யாரும் நம்புவது இல்லையோ என்று எண்ணம் தோன்றியது.

உண்மையாகவே ஒரு பெண்ணிற்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் கூட நம்ப கொஞ்சம் நேரம் எடுப்பது இது போன்ற பெண்களால்தான். இது போன்ற பெண்கள்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்ததை சொன்னால் கூட யாரும் நம்ப மறுக்கிறார்கள். இப்போது டிப்ரஷன் என்ற வார்த்தையை அனைவருமே சொல்கிறார்கள்.அது ஒரு சாதாரண வார்த்தை போல ஆகி விட்டது.

-விளம்பரம்-

அதேபோலத்தான் ஒரு பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தால் அப்படியா என்று சாதாரணமாக ஆகிவிட்டது. இதுபோன்று ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதால் அவர்களின் கெரியரை கூட விட்டு விடுங்கள் அவரது வாழ்க்கை என்ன ஆகும்.ஆனால் இது பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதால் யார் மீது தவறு இருப்பது என்பது நமக்கு தெரியும். மாயா எனக்கு தெரியும், என்னுடைய நண்பரின் நண்பர்தான்.

அவர் ஆரம்பத்தில் அவர் ஏதோ கேம் காக இப்படி எல்லாம் செய்கிறார் என்று தான் தோன்றியது. ஆனால் அவர் இப்படி செய்வதற்கு முன்னால் ஏன் ஒரு நொடி கூட மற்றவரை பற்றி யோசிக்கவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. இதுவே ஒரு பெண்ணிற்கு நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement