Theatre Artistனு நிரூபிச்சிடீங்க – குடும்பத்தோடு சேர்ந்து மாயா போட்ட ட்ராமாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
679
- Advertisement -

தமிழில் விஜய் டிவியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 79 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வார நாமினேஷனில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. ஆனால், கூல் சுரேஷ் வெளியேறி இருக்கிறார். இந்த வாரம் கேப்டன் யாரும் இல்லை. இதனால் போட்டியாளர்கள் குஷி ஆகி விட்டார்கள். அனைவரும் எதிர்பார்த்த ப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெறுகிறது.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க்:

இதில் போட்டியாளர்களின் ஒவ்வொரு உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகிறார்கள். இதனால் பிக் பாஸ் வீடே எமோஷனல் ஆகி இருக்கிறது. நேற்று மணி உடைய பெற்றோர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது ரவீனா, நான் 2003 இல் பிறந்தேன் என்று சொன்னவுடன் மணியன் அம்மா, அப்படியா மணிக்கும் உனக்கும் 10 வருடம் வித்தியாசமா? என்று சொல்கிறார். பின் தினேஷ் அம்மா, அப்பா வருகிறார்கள்.

ரவீனா வீட்டில் செய்தவர்கள்:

இதனை அடுத்து விஷ்ணு அம்மா, அர்ச்சனா அம்மா, அப்பா வருகிறார்கள். மேலும், இன்று நிகழ்ச்சியில் ரவீனாவின் உறவினர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் வெளியில் நடந்து கொண்டிருப்பதை கோட்வோர்டில் சொல்லி இருக்கிறார்கள். விதியை மீறி இவர்கள் இருவரும் சொல்லியதால் பிக் பாஸ் அவர்களை உடனடியாகவே வெளியில் அனுப்பி விட்டார்கள். அதற்குப்பின் மாயாவின் அம்மா வந்திருந்தார். அவர் வந்த உடனே அனைவரிடமும் ஜாலியாக பேசி இருந்தார்.

-விளம்பரம்-

மாயா அம்மா செய்த வேலை:

அப்போது மாயா அம்மா, எங்கள் வீட்டில் மயில் வளர்கிறோம். குட்டி போட்டு இருக்கு என்று எதார்த்தமாக வெகுளியாக பேசி இருந்தார். உடனே மாயா அவர் வாயை அடைத்து விடுகிறார். காரணம், மயில் இந்தியாவின் தேசிய பறவை. அதை யாரும் வீட்டில் வளர்க்க கூடாது. அது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணியும் கிடையாது. அப்படி வளர்த்தால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இதை தெரியாமல் மாயாவின் அம்மா உளறிவிட்டார்.

மாயா சகோதரி அழுத வீடியோ:

இதனால் தான் மாயா அவரை தடுத்து நிறுத்தி சென்று விட்டார். இந்நிலையில் மாயா உடைய சகோதரி செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரோல் ஆகி வருகிறது. அதாவது, மாயா உடைய சகோதரி ரொம்ப எமோஷனலாக மாயாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் கதறி கதறி எல்லாம் அழுந்திருக்கிறார். இன்று முழுவதும் மாயா உடைய சகோதரி அழுத வீடியோ தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதை பலருமே, எதற்கு இந்த ஓவர் ஆக்டிங்? முடியல, மாயாவையே மிஞ்சிட்டாங்க என்றெல்லாம் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Advertisement