பட்டத்தை வென்ற அர்ச்சனா, பிரதீப் போட்ட பதிவு – உண்மையா பாவம்யா இந்த மனுசன்

0
426
Archana
- Advertisement -

பட்டத்தை வென்ற அர்ச்சனா குறித்து பிரதீப் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 103 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். இன்னும் இந்த நிகழ்ச்சியின் பைனல் இன்று நடைபெறுகிறது. இதில் யார் டைட்டில் பட்டதை வெற்றி பெறுவார்கள்? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசன் பட்டத்தை அர்ச்சனா வென்று இருக்கிறார். இந்த விஷயத்தை ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்று போட்ட பதிவு குறித்து குறிப்பிட்ட பிரதீப் ‘ இதுல வந்திருக்குன்னா உண்மையா தான் இருக்கும்னு நம்புறேன். வாழ்த்துக்கள் அர்ச்சனா, நல்லா இரு என்று பதிவிட்டு குறுக்க வந்த கௌசிக் என்ற ஹேஷ் டேக்கையும் போட்டுள்ளார். மேலும், மற்றொரு பதிவில் ‘எனக்காக அழுது, போறவரவன்கிட்ட எல்லாம் சண்டை போட்டு, இன்றளவும் வீடியோஸ் எல்லாம் போட்டு ட்ரெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கிற என் அன்பு உள்ளங்களே மிகவும் நன்றி’

“ஆனால் நான் சோகமா எல்லாம் இல்ல, நீங்களும் சோகமா இருக்காதீங்க, ஜாலி பண்ணலாம். வன்மம் போதும் முடிச்சுக்கலாம். அநியாயத்துக்கு அநியாயம் பண்றீங்க” என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய போகும் தருணத்தில் இனியும் எந்த வன்மமும் வேண்டாம் யாரையும் குறை கூற வேண்டாம் நாம் ஜாலியாக இருக்கலாம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதீப்.

-விளம்பரம்-

பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். இந்த சீசனில் பிரபலமான மற்றும் பலமான போட்டியாளராக இருந்தவர் பிரதீப். இவருக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகமாக தான் இருந்தது. கண்டிப்பாக, இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

இதற்கு முழுக்க முழுக்க காரணம் மாயா- பூர்ணிமா கேங்க் தான். பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் கூறியிருந்ததார்கள். கமலும், பிரதீப் தரப்பு குறித்து கேட்காமலேயே வெளியேற்றினார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்து கமலை வறுத்தெடுத்து இருந்தார்கள். இந்த வாரம் வெளியேறிய அணைத்து போட்டியாளர்களும் உள்ளே சென்ற போதிலும் பிரதீப், ஐசு, யுகேந்திரன், அன்னபாரதி, பாவா செல்லதுரை போன்றவர்கள் மட்டும் உள்ளே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement