அந்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்க, பூர்ணிமா வெளியேற்றத்திற்கு பின் பிரதீப் போட்ட பதிவு.

0
317
- Advertisement -

பூர்ணிமா வெளியேற்றத்திற்கு பின் பிரதீப் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 95 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். மேலும், கடந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. மிகவும் மொக்கையான டாஸ்க்குகளுடன் நடந்த இந்த Ticket To Finale டாஸ்க்கின் இறுதியில் விஷ்ணு வெற்றி பெற்றார்.

- Advertisement -

இந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் துவங்கி இருந்தது. இதில் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் யார் செல்வார்கள்? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்த நிலையில் பூர்ணிமா 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார். இந்த வாரம் விஷ்ணுவை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கின்றனர். இதில் மணி, பூர்ணிமா, விஜய் வர்மா ஆகிய மூன்று பேரில் யாராவது ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமாவின் இந்த முடிவை பலர் பாராட்டி வருகின்றனர்.

பூர்ணிமா வெளியேறினாலும் அவரை பிரதீப் ரசிகர்கள் தொடர்ந்து திட்டி கொண்டு தான் வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் பிரதீப்பிற்கு இந்த சீசனில் ரெட் கார்ட் கிடைக்க மிக முக்கிய காரணமாக இருந்தது மாயா மற்றும் பூர்ணிமா தான். மேலும், மாயாவே பல முறை வெளியில் சென்றதும் ப்ரதீபிடம் சென்று அனைத்தையும் சொல்லிவிடுவேன் என்றும் கூறி இருந்தார். ஆனால், கடைசி வரை பூர்ணிமா பிரதீப் விஷயத்தில் உறுதியாகவே இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நேற்று பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘ பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு குடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மார் அடிக்கிற கும்பல்லாம் இடத்துக்கு பேசி வாய கெளராதீங்க. நான் மற்றவர்களை மோசமானவர்கள் என்று கூறி கேம் ஆடவில்லை. அது என்னுடைய சுபாவமும் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

மேலும், அந்த பதிவில் பொழச்சி போங்க, உங்க பொழப்ப கெடுக்கமாட்டேன் என்று ஹேஷ் டேக்குகளையும் போட்டுள்ளார். ஏற்கனவே பிரதீப்பிற்கு ரெட் கார்ட் கொடுத்த ஐசுவிற்காக அவரது தந்தை பிரதீப்பிற்கு வாட்ஸ் அப்பில் மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தார். அதே போல ஐசுவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement