நான் அவ்ளோ ஒர்த் இல்லன்னு நீ `நினைச்ச – மாயாவை பிரதீப் கேட்ட நச் கேள்வி.

0
488
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்களில் கடந்த ஞாயிறு கிழமை கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டை, சர்ச்சைகள் தொடங்கியிருந்தது. ஞாயிறு மாலை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் 7

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது. அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி:

மேலும், இந்த சீசனில் சோசியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் ஒருவர் தான் பிரதீப் ஆண்டனி. பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக தான் விளையாடி வந்தார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா மற்றும் அவருடைய கேங்க் பிரதீப் மீது குற்றம் சாட்டியதால் எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காமல் பிக் பாஸ் மற்றும் கமல் அவரை நிகழ்ச்சியை விட்டு வெளியே அனுப்பி இருந்தார்கள். இதனால் ரசிகர்கள் கமலை வறுத்து எடுத்திருந்தார்கள்.

-விளம்பரம்-

பிரதீப் பதிவு:

மேலும், மீண்டும் பிரதீப் பிக் பாஸ் வீட்டுக்குள் வராதது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதோடு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்து இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பிரதீப் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், ஹாய் மாயா, லைஃப் எல்லாம் எப்படி போகுது? நீ நல்லா இருப்பன்னு தெரியும்.

மாயா குறித்து போட்ட பதிவு:

என்னுடைய நட்போட விலை வெறும் 50 லட்சம். நான் அவ்ளோ எல்லாம் ஒர்த் இல்லன்னு நீ நெனச்ச. எனக்கு புரிகிறது. இது ஒரு நல்ல விளையாட்டு. செக்மேட் என்று மாயா- பிரதீப் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சேர்ந்து பாடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது இந்த பதிவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் மாயாவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.

Advertisement