முகத்தில் இந்த பகுதியை அழகுபடுத்த நினைத்து தான் ரைசாவிற்கு இந்த நிலை – மருத்துவரின் பேட்டியால் வெளியான உண்மைகள்.

0
12650
Raiza
- Advertisement -

தவறான பேசியலால் முகம் வீங்கிப்போனதை தொடர்ந்து நடிகை ரைஸா வில்சன் நஷ்ட ஈடு கேட்டு சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் பைரவி செந்தில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். சமீபத்தில் ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-155.jpg

இதை தொடர்ந்து நான் அவரிடம் பேச நினைத்தால் என்னை அவர் சந்திக்க மறுக்கிறார். ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள் என்று பரிதாபத்துடன் பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சம்மந்தப்பட்ட தோல் மருத்துவமனையின் மருத்துவர் பைரவி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இருபக்கமும் சீரான அளவில் இல்லாத முக அமைப்பை, சீர் செய்யும் dermal fillers சிகிச்சையே ரைசாவிற்கு அளிக்கப்பட்டது என்று கூறியிருந்தார் பைரவி.

இதையும் பாருங்க : மீண்டும் கர்ப்பமான சாண்டி மனைவி – தனது அம்மாவுக்கு நலங்கு வைத்த லாலா – குயூட் புகைப்படம் இதோ.

- Advertisement -

இந்நிலையில் ரூ. 1 கோடி நஷ்டஈடு கேட்டு டாக்டர் பைரவி செந்திலுக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்திருக்கிறார் ரைசா வில்சன். ரைசா வில்சன் செய்து கொண்ட சிகிச்சைக்கு ரூ. 1.27 லட்சம் செலவு செய்தாராம். செலவு செய்தும் ரத்தக்கசிவு ஏற்பட்டு, முகம் வீங்கியது தான் மிச்சம் என்று கூறியுள்ள ரைசா, 15 நாட்களில் ரூ. 1 கோடி தராவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தனது வழக்கறிஞர்மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ரைசா.

இப்படி ஒரு நிலையில் ரைசாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் பைரவியும், ரைசாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரும் விளக்கமளித்துள்ளனர். அதாவது ரைசாவின் கண்ணனுக்கு கீழ் உள்ள குழிகளை சரி செய்ய தான் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும். இந்த சிகிச்சை அளித்தால் கொஞ்சம் வீக்கம் இருக்கும் என்றும், இந்த சிகிச்சைக்கு பின் குடி, தம் போன்றவைகளை தொடக்கூடாது என்றும் மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், ரைசா இந்த சிகிச்சைக்கு பின்னர் மது அருந்தினரா என்பது தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement