ஷெரீனை வச்சி செய்து கலாய்க்கும் ரியோ மற்றும் பாலாஜி.!

0
5286
rio
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை பல்வேறு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இறுதிப்போட்டிக்கு லாஸ்லியா சாண்டி ஷெரின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பது நமக்குத் தெரிந்துவிடும்.

-விளம்பரம்-

இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர் .

இதையும் பாருங்க : தர்ஷன் சனம் ஷெட்டியை காதலிக்கிறாரா இல்லையா ? தர்ஷன் குடும்பத்தை சேர்த்தவரே சொல்லிட்டார்.!

- Advertisement -

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதே போலநேற்றய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக சாக்க்ஷி மற்றும் கஸ்தூரி கூட பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இன்று வெளியான முதல் பெரோமோவில் விஜய் டிவி பிரபலங்களான பாலாஜி, தொகுப்பாளினி பிரியங்கா, ரியோ ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர் . ஏற்கனவே, சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

-விளம்பரம்-

இன்றைய முதல் ப்ரோமோ :

இந்த சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : தெலுங்கு பிக் பாஸில் தமிழ் போட்டியாளரை டார்கெட் செய்யும் நாகர்ஜுனா.! வலுக்கும் எதிர்ப்புகள்.!

இதேபோல லாஸ்லியாவிற்கும் முகெனுக்கு இணையான ஆதரவு இருந்து வருகிறது. முகெனுக்கு எப்படி தர்ஷன் ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றன. அதேபோல கவின் ரசிகர்கள் பலரும் தற்போதுலாஸ்லியாவிற்கு ஆதரவை அளித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால் கண்டிப்பாக லாஸ்லியா முதல் மூன்று இடத்தில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்று நம்பப்படுகிறது. சாண்டியை எடுத்துக்கொண்டால் இவருக்கும் கவின் ரசிகர்களின் ஆதரவு இருந்துவருகிறது. அதே போல இவருக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு ஆரமிக்கல் கூட இருந்து வருகிறது. இறுதியாக ஷெரின் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இதுவரைஷெரின் பலமுறைநாமினேஷனில் இடம் பெற்று இருக்கிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்காக ரசிகர்கள் அவரை காப்பாற்றியுள்ளனர்.

மேலும் இவருக்கும் தர்ஷனின் ஆதரவு இருந்து வருகிறது. இருப்பினும் மற்ற மூன்று போட்டியாளர்களை ஒப்பிடும்போது ஷெரீனுக்கு கொஞ்சம் ஆதரவு குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .எனவே, இந்த சீசனின் முதல் மூன்று இடத்தை முகென் லாஸ்லியா, சாண்டி, ஆகியோர் பிடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. தற்போது சென்று கொண்டிருக்கும் ஓட்டிங் நிலவரப்படி முகெனுக்கு தான் அதிக வாக்குகள் பதிவாகி முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரைத் தொடர்ந்து லாஸ்லியா இரண்டாவது இடத்திலும் சாண்டி மூன்றாவது இடத்திலும் கடைசி இடத்தில் சேரினும் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் ஐந்து நாட்களில் இந்த பிக் பாஸ் சீசன் 3 பட்டத்தை வெல்ல போவது யார் என்பது நமக்கு தெரிந்துவிடும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement