பாதிக்கப்பட்டவங்க பக்கம் நிக்கலான கூட பரவாயில்ல – அபிராமியை சூசகமாக விமர்சித்த சனம் ஷெட்டி.

0
390
Abhirami
- Advertisement -

கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் குறித்து பிக் பாஸ் பிரபலம் அபிராமி கல்லூரிக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் நிலையில் தற்போது அபிராமிக்கு சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார் சனம் ஷெட்டி. கலாஷேத்ரா அறக்கட்டையின் கீழ் இயங்கும் இந்த கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மீதான ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கின்றனர்.பின் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்தும், அத்துமீறி மிரட்டியும் நடந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து வழக்கில் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஐதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

- Advertisement -

நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கலாஷேத்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் அபிராமி. இதுகுறித்து பேசிய அவர் “நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன்.

கலாஷேத்ரா பற்றி சமூக வலைதளத்தில் பரவும் தகவல்களால் வேதனையடைந்தேன்.கலாஷேத்ரா ஆசிரியர் நிர்மலா என்பவர் என்னை தொடர்பு கொண்டு ஹரிபத்மனுக்கு எதிராக பேசுமாறு கூறியுள்ளார். பேராசிரியர் ஹரி பதமன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரை எந்தவித தொல்லையும் அளிக்கவில்லை. ஒரு பக்கமாக நின்று பேசாமல் இருதரப்பும் விசாரித்து முடிவெடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அபிராமி ‘கலாக்ஷேத்ராவில் பாலியல் புகார்கள் விவகாரத்தில் மாணவிகள் தவறாகத் தூண்டிவிடப்படுகிறார்கள். அந்தக் கல்லூரியில் ஒரு சில ஆசிரியர்கள், மாணவிகளைத் தூண்டிவிடுகிறார்கள். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பெடுத்த வரைக்கும் எந்தவித பாலியல் தொல்லைகளையும் கொடுத்ததே இல்லை. அவர் மிகவும் சிறந்த ஆசிரியர் என்று கூறி இருந்தார்.

அபிராமியின் இந்த கருத்திற்கு பலரும் ஆதரவை விட எதிர்புகள் தான் தெரிவித்து வருகின்றனர். பின்னணி பாடகி சின்மயி கூட இந்த விவாகரத்தில் அபிராமிக்கு எதிராக பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் சனம் ஷெட்டியும் இந்த விவகாரம் குறித்து சூசகமாக அபிராமியை விமர்சித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘குரல் கொடுப்பதற்கு அவர்களுக்கு பாடம் சொல்லித்தர அவசியம் இல்லை.

தங்களுக்கு நடந்துள்ள கொடுமைக்கு எதிராக போராட அவர்களுக்கு தைரியம் மட்டும் தான் தேவை. அது அவர்களுக்கு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கவில்லை என்றால் அமைதியாக ஒரு ஓரமாக உக்காருங்க. உண்மை வெளியில் வரட்டும். சனம் ஷெட்டி இந்த பதிவில் அபிராமியின் பெயரை குறிப்பிட்டவில்லை என்றாலும், சனம் ஷெட்டியின் இந்த பதிவு அபிராமியை குறிப்பிட்டு தான் போடப்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement