ஒரு ராஜா ராணிபிரபலம், ஒரு கானா பாடகர் – பிக் பாஸில் Wildcard என்ட்ரியாக போகும் 2 பிரபலம்.

0
258
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி ஆகும் இரண்டு பிரபலங்கள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி 19 நாட்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.

வைல்ட் கார்டு என்ட்ரி:

பின் பவா தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரமும் ஒரு போட்டியாளர் வெளியாக இருப்பதால் மொத்தம் 15 போட்டியாளர்கள் மட்டுமே அடுத்த வாரம் நிகழ்ச்சியில் விளையாடுவார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டு என்ட்ரியாக இரண்டு நபர்கள் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாகவே நிகழ்ச்சியின் பாதியில்தான் வைல்ட் கார்டு என்ட்ரியை பிக் பாஸ் அறிமுகம் செய்வார்கள். ஆனால், இந்த முறை தொடக்கத்திலேயே செய்கிறார்கள். அதில் ஒருவர் ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா தான்.

-விளம்பரம்-

ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா:

இவர் விஜேவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதற்கு பிறகு ராஜா ராணி சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டி இருந்தார். ஆனால், இந்த சீரியலில் இவர் பாதியிலேயே வெளியேற்றிவிட்டார். அதற்கு பின்னர் அர்ச்சனா எந்த சீரியலும் கமிட்டாகவில்லை. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்வார் என்று ஆரம்பத்திலேயே கூறப்பட்டது. இன்னும் சில தினங்களில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுப்பார் என்று உறுதியாக கூறப்படுகிறது. இவரை எடுத்து இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளராக கானா பாலா கலந்து கொள்ள இருக்கிறார்.

கானா பாலா குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற கானா பாடகராக திகழ்ந்தவர் பாலா. இவருடைய பாடல்கள் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பிஸியான பாடகராக வலம் வந்தவர். ஒரு கட்டத்தில் இவருடைய பாடல்களுக்கான மவுஸ் குறைந்துவிட்டது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தான் இருக்கிறார். தற்போது பிக் பாஸ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் மீண்டும் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் இவர்களுடைய என்ட்ரி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement