Bigg Boss Tamil : மூன்றாம் வாரத்தில் வெளியேறிய 2 நபகர்கள் – நீங்க எதிர்பார்த்தது தான். யார் யார் தெரியுமா ?

0
542
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து உள்ளது. தொலைக்காட்சி பிக் பாஸ் வேறு. உள்ளது. இந்த பிக் பாஸ் வேறு. இதையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

நிகழ்ச்சியில் முதலில் வெளியேறியது:

மேலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. இதனால் பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகிறார்கள். அதிலும் வனிதா தாக்கி கொளுத்தி போட்டு வருகிறார். அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள். அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான நாமினேஷனும் நடந்து முடிந்து 6 பேர் வெளியேற்றுவதற்கான பட்டியலில் இருந்தார்கள்.

இரண்டாவது வாரம் எவிக்ஷன்:

இரண்டாவது வாரம் எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். பின் இதனை தொடர்ந்து இந்த மூன்றாவது வாரத்திற்கான நாமினேட் டாஸ்க் நடந்தது. அதில் யாரைக் காப்பாற்றுவீர்கள் என்ற டைட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேருக்கு ரோஸ் கொடுத்து காப்பாற்றலாம் என்று அறிவித்து இருந்தார்கள். இதில் அதிகமாக ரோஸ் வைத்து இருப்பவர்கள் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

மூன்றாம் வாரம் நாமினேஷன் பட்டியல்:

அந்த வகையில் குறைந்த ரோஸ் வாங்கி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் நிரூப், சினேகன், ஜூலி, ஷாரிக், அனிதா, பாலாஜி முருகதாஸ், அபிநய், தாமரை, தாடி பாலாஜி பெற்றிருந்தனர். அனைவரும் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் இரண்டு எலிமினேஷன் என்று பிக் பாஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ஷாரிக் மற்றும் பாலாஜி வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உண்மையில் மூன்றாம் வாரம் வெளியேறியது:

ஆனால், அது உண்மை இல்லை என்று கூறப்படுகிறது. இந்த வாரம் சினேகன் மற்றும் சாரிக் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலாஜி வெளியே வரப் போகிறார் என்று சொன்ன தகவல் பொய்யானது. ஏனென்றால், ஷாரிக்கை விட பாலாஜிதான் வீட்டில் அதிகமான கண்டன்ட் கொடுக்கிறார். அதனால் அவரை வெளியேற்ற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே இந்த வாரம் சினேகன் மற்றும் சாரிக் வெளியேறியது உறுதியாகியுள்ளது.

Advertisement