Bigg Boss Tamil : ‘கதவை உடைக்க சென்ற வனிதா, மேக்கப் கரைய கரைய, கதறி கதறி அழுது, பின் பிக் பாஸ் வைத்த கேடுவை ஏற்று வெளியேற்றம்.

0
543
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. அதிலும் வனிதா ஒருவரை விடாமல் கொளுத்தி போட்டு வருகிறார். முதல் நாளில் இருந்தே வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், விக்ரம் படப்பிடிப்பு காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். கமலின் இந்த அறிவிப்பில் இருந்தே வனிதா தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறிக்கொண்டே வந்தார்.

-விளம்பரம்-

நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக மட்டும் தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். பின் இன்று வனிதா மிகவும் மனமுடைந்து கண்பெக்ஷன் ரூமில் பிக்பாஸ் இடம் பேசி இருக்கிறார். அப்போது அவர், என்னை வீட்டில் உள்ள எல்லோரும் டார்கெட் செய்கிறார்கள்.அவர்களிடம் சண்டை போட எனக்கு விருப்பம் இல்லை. அவர்களுடன் சண்டை போட்டு நான் என்னுடைய தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

- Advertisement -

எல்லோருமே ஒரு பக்கமிருந்து என்னை மட்டும் டார்கெட் செய்து தாக்குற மாதிரி எனக்கு தெரிகிறது. எனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லை. என்னை தயவு செய்து வெளியில் அனுப்பி விடுங்கள் என்று அழுது புலம்பி இருக்கிறார் வனிதா. உடனே பிக் பாஸ், இந்த வீட்டிலேயே ரொம்ப தைரியமான, ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றால் நீங்கள் தான். நீங்களே இப்படி சொன்னால் எப்படி? அதெல்லாம் ஒன்றுமில்லை போய் நீங்கள் உங்களை சமாதனம் படித்துக் கொண்டு வாருங்கள் பிறகு பேசலாம் என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் நிரூப், ஜூலிக்கும் வனிதாகும் பெரும் சண்டை வெடித்தது. இதில் நிரூபை மிகவும் கேவலமாக திட்டி தீர்த்தார் வனிதா. பின்னர் நான் பிக் பாஸிடம் பேச வேண்டும் என்று நீண்ட நேரம் கேட்டு கொண்டே இருந்தார். கன்பெக்ஷன் கதவு அருகில் நின்று கொண்டு கதவை திறன்கள் என்று நீண்ட நேரம் கதறிக்கொண்டே இருந்தார் வனிதா. பின்னர் ஒரு கட்டத்தில் கதவை உடைக்கவே சென்றுவிட்டார். இதனால் வேறு வழி இல்லாமல் வனிதாவை கன்பெக்ஷன் ரூமிற்கு அழைத்தார் பிக் பாஸ்.

-விளம்பரம்-

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதர்க்கு முன்பாக அனைத்திற்கும் சம்மதம் என்று தெரிவித்தே காண்ட்ரேக்ட்டில் கையெழுத்து போடீர்கள் வேண்டும் என்றால் அதை அனுப்பி வைக்கிறோம் என்று பிக் பாஸ் சொன்னார். ஆனால், வனிதா அது எல்லாம் எனக்கு தெரியும், அதை படித்தாலும் எனக்கு ஒன்னும் புரியப்போவது இல்லை. அதற்கு பின் வரும் பிரச்சனையை எல்லாம் நான் வெளியில் சென்று என் வக்கீலை வைத்து பார்த்துக்கொள்கிறேன் என்னை அனுப்பிவிடுங்கள்.

அட்லீஸ்ட் என்னை ஒரு போன் செய்யவாவது அனுமதியுங்கள் நான் பேசியே ஆக வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், விதிகளில் அவ்வாறு சலுகை இல்லை என்பதால் பிக் பாஸ் அதற்கும் சம்மதிக்கவில்லை. மேலும், இப்படிபட்ட கேவலமான நபர்கள், கேவலமான டாஸ்க்கை எல்லாம் செய்ய முடியாது. என் மரியாதையை நான் குறைத்துகொள்ள முடியாது. என்னிடம் சண்டை போடுபவர்களை என்ன செய்வேன் என்று எல்லாருக்கும் தெரியும். அப்படி இங்க பேசி நான் சம்பாதித்து வைத்து இருக்கும் பெயரை கெடுத்துக்கொள்ள முடியவில்லை என்று கூறி இருந்தார். இறுதியாக பிக் பாஸ் எவ்ளோவோ சொல்லியும் அதனை ஏற்காத வனிதா தனது முடிவில் உறுதியாகவே இருந்தார். இதனால் அவர் வெளியேற்றப்பட்டர்.

Advertisement