தலீவருக்கு இந்த ‘பறக்கும் பன்றி’ விருதினை அளிக்க வேண்டும் – ப்ளூ சட்டையின் எல்லை மீறிய பதிவு.

0
1389
Rajini
- Advertisement -

ஜெயிலர் படம் வெளியானதில் இருந்தே ரஜினி மற்றும் ரஜினி ரசிங்கர்களை தொடர்ந்து விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது ரஜினியை மீண்டும் விமர்சித்து இருக்கிறார். அண்ணத்த படத்தில் இருந்தே ரஜினி ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டைக்கும் ட்விட்டரில் பனிப்போர் சென்று கொண்டு இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் ரஜினியை மீண்டும் வம்பிழுக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் ப்ளூ சட்டை. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் நேற்றோடு 50 நாட்களை கடந்த நிலையில் இந்த படத்தின் 50வது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்று இருந்தது .

-விளம்பரம்-

இந்த விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது. அதில் ஒரு பரிசாக, உதயநிதி கையில் ரெக்கை கொண்ட பண்ணி இருப்பது போல ஒரு சிலையை படக்குழுவிற்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் ‘படம் பார்த்து பாராட்டியவர் என்கிற முறையில்…சிங்கிள் சிங்கமாக இருப்பதாக நினைக்கும் தலீவருக்கு இந்த ‘பறக்கும் பன்றி’ விருதினை அளிக்க வேண்டும்.

- Advertisement -

இதனால் அவர் கற்கவுள்ள படிப்பினை – 1. சிங்கம் சிங்கிளாக மட்டுமே தியேட்டரில் ரிலீஸ் ஆகும். யாரிடமும் போட்டி போட்டு வெல்லாது.போட்டி போட்டாலும்… விஸ்வாசத்திடம் தோற்ற வரலாறு மீண்டும் தொடரலாம். உண்மையில் சிங்கிள் சிங்கமாக வந்து தலீவரை வீழ்த்தியது தூக்கு துரைதான். 2. ‘பன்னிங்கதான் கூட்டமா வரும்’ எனும் மட்டமான எண்ணம் மறையும். 3. பருந்துக்கு இணையாக பன்றிகளும் உயரத்தை தொடும்’ இவ்வாறாக பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் வசூலை விமரித்தும் ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ‘ போலியான பாக்ஸ் ஆபீஸ் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பொதுவாக அனைத்து தயாரிப்பு நிறுவனமும் உண்மையான வசூல் நிலவரத்தை சொல்வதில்லை. குறிப்பாக தமிழகத்தில் எந்தெந்த ஏரியா, வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் என்ன கலெக்சன் என்று புள்ளிவிவரத்துடன்  கூறியதில்லை. ரவுண்டாக ஒரு ஊத்தாப்பம் போடுவார்கள். 50, 75, 100 கோடிகள் என்று. அல்லது ஒரு சக்ஸஸ் (Sarcastic) மீட் வைத்து கொண்டாடுவார்கள்.

-விளம்பரம்-

அதில் பெரும்பாலும் வசூல் தொகையை குறிப்பிடுவதில்லை. படம் சக்ஸஸ். நம்புங்க என்று சொல்வதோடு சரி. இதோ இப்போது ஒருவார கலெக்சன் 375.40 கோடி என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. Tentative. Still uploading என்று ஒரு சிறிய குழப்பத்துடன். இது ஒருவார வசூல் குறித்த Tentative. Still uploading ஆ அல்லது அடுத்த கட்ட வசூலுக்கான Tentative. Still uploading ஆ என்று தெளிவாக கூறியிருக்கலாம்.

சரி. இப்போதைக்கு இதுவே உண்மையான ரிப்போர்ட் என நினைத்து இதையே ஒருவார கலக்சனுக்கான அளவுகோலாக வைத்து கொள்வோம். இதன்படி ஒப்பிட்டால்… ஒரு வாரத்திற்குள் 400 கோடி, 450, 500, 600 கோடி என்று பலர் அள்ளி விட்டார்களே!!  அதெல்லாம் பச்சை பொய் என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதுதானே உண்மை? Box Office Trackers, Social media Influencers, Youtube பேட்டி தந்த பெரியப்பாக்கள் இதுவரை சுட்டது எல்லாம் போலி வடைகள்தான் என்று ஓயாமல் சொல்லி வந்தேன்.

அதற்கு ‘வன்மத்தை கக்குகிறான். வயித்தெரிச்சல்’ என இந்த கோஷ்டிகளில் பலர் சவுண்ட் விட்டார்கள். பருந்துக்குஞ்சுகள் உட்பட. இப்போது இவர்களின் முகத்திரை கிழிந்து தொங்கி விட்டது. இதற்கு முன்பு பல படங்களின் வசூலை இவர்கள் போலியாக அள்ளி விட்டார்கள் என்பதை இனியாவது நம்பவும். எனக்கு வந்த கமண்ட்களில் ‘இவர்கள் சொல்வது பொய்யென்றால்.. நீங்களாவது உண்மையான ரிப்போர்ட்டை சொல்லுங்கள்’ என பலர் கேட்டனர்.

அதற்கு நான் தந்த பதில் ஒன்றுதான். ‘இன்னும் கொஞ்சம் நாள் காத்திருப்போம்’ என்பது தான். அனைத்து போலி பாக்ஸ் ஆபீசர்களின் வண்டவாளங்களும் இன்றாவது தண்டவாளத்தில் ஏற்றப்பட்டதில் மகிழ்ச்சி. மீண்டும் கூறிக்கொள்வது. தயாரிப்பு தரப்பு கூறியுள்ள கலெக்சன் ஒரு ஒப்பீட்டிற்கான அளவுகோல் மட்டுமே. அனைத்து தயாரிப்பு நிறுவனங்களும் உண்மையான வசூலை சொல்வதில்லை.

ரவுண்டாக ஒரு ஊத்தாப்ப போஸ்டர் மட்டுமே!! அப்படி ரவுண்டு கட்டாமல் ஒரு ரிப்போர்ட்டை சன் பிக்சர்ஸ் தந்திருப்பது சிறு ஆறுதல். கமலின் விக்ரம் வசூல் 420+ கோடியை  ஜெயிலர் ஒரே வாரத்திற்குள் தாண்டியது என்று பொய் சொன்ன வடை வாயர்களே.. வசமா மாட்டுனீங்க. இனி உங்க கலக்சன் ரிப்போர்ட் மக்களிடம் எடுபடாது’ என்று பதிவிட்டு மீண்டும் ரஜினி ரசிகர்களை சீண்டி இருக்கிறா


Advertisement