நான் 5 வருசத்துக்கு முன்னாடி சொன்ன கத இது, இந்த கதையை ஜெராக்ஸ் எடுத்து,கமாண்டருக்கு தந்துருக்கான் – விஜய் குட்டி கதையை கேலி செய்த ப்ளூ சட்டை.

0
242
- Advertisement -

லியோ படத்தின் வெற்றி விழாவை கிண்டல் செய்து ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் புலம்பி கொட்டுகின்றனர். அந்த வகையில் விஜய்யின் லியோ படம் உருவான நாளில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து வருகிறார். அந்த வகையில் லியோ படத்தின் வசூலையும் வச்சி செய்த ப்ளூ சட்டை மாறன், லியோ படத்தின் வெற்றிவிழாவையும் தொடர்ந்து கலாய்த்து வந்தார்.

- Advertisement -

இந்த விழாவிற்கு முன்பு விழாவிற்கு வருபவர்கள் கட்டாயம் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என்றும் விழாவிற்கான பாஸ் இருந்தால் மட்டும் தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் விஜய் மக்கள் இயக்கம்அறிவித்து இருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து பதிவு ஒன்று போட்டுஇருந்தார். அதில் அவர், படம் வெற்றி பெற்றதற்கான ஆதாரத்தையும் கேளுங்கள் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.

இதற்கு முன்பே ப்ளூ சட்டை மாறன் ஓடாத படத்துக்கு சக்ஸஸ் மீட் வக்கிறது. இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல‌. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம் என்று கூறி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ப்ளூ சட்டைமாறனைவறுத்து எடுத்து வந்தனர் தற்போது விஜயின் பேச்சையும் கேலி செய்து இருக்கிறார். நேற்று நடைபெற்ற லியோ படத்தின் வெற்றிவிழாவில் விஜய் பேசிய குட்டி ஸ்டோரியில் ‘ஒரு காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போறாங்க.

-விளம்பரம்-

அந்த காட்டுல காக்க கழுகு (என்று சொன்னதும் ஒரு நொடி சிரிப்பை அடக்க முடியாமல் மைக்கில் இருந்து கொஞ்சம் தள்ளி நின்றார். உடனே அரங்கத்தில் சில நொடிகள் கைதட்டலும், சத்தமும் கிழிந்தது ) காட்டுன்னா இதெல்லாம் இருக்கும் தான அதுக்கு சொன்னேன் பா!. அது மாதிரி இந்தக் காட்டுக்கு வேட்டைக்கு போறாங்க. ஒருத்தர் வில் அம்பு. இன்னொரு நபர் ஈட்டி, வேல் வச்சுருக்கிறவர் முயலை குறி வைக்கிறார்.

இன்னொருத்தர் யானையைக் குறி வைக்கிறார். இதுல யார் மாஸ் தெரியுமா.. யானைக்கு குறி வச்சவர் தான் மாஸ். கைக்குக் கிடைக்கிறது இல்லமா பெருசா குறி வச்சிருக்கார்ல. அது மாதிரித்தான் உயரிய விஷயங்களுக்கு ஆசைப்படணும். ஆசைகள் கனவுகள் இதுல என்ன தவறு’ என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் விஜய்யின் இந்த பேச்சை ப்ளூ சட்டை கேலி செய்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி தான் ஒரு படத்தின் விமர்சனத்தின் போது சொன்ன குட்டி ஸ்டாரி என்று ஆதாரம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதில் ‘அஞ்சி வருசத்துக்கு முன்ன நான் சொன்ன கதையைத்தான் நேத்து.. மேடைல உருட்டிட்டு இருந்தியா?’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement