7-ஆம் தேதி தமிழகத்துக்கு “Red Alert”..! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை! ரெட் அலர்ட் என்றால் என்ன ?

0
815
Rainfall
- Advertisement -

தமிழகம் அதன் சுற்று பகுதிகளில் நேற்று (அக்டோபர் 3) இரவு பரவலாக மழை பெய்த்தது. தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி 25 செ.மீ மழை பெய்யும் என்று தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

-விளம்பரம்-
flood
flood

ஏற்கனவே பாண்டிச்சேரியில் பெய்து வரும் கன மழையால் ஒரு சில பகுதிகளில் இருக்கும் மக்கள் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது கடலோர பகுதிகளில் இருக்கும் மக்களை பீதியடைய செய்துள்ளது.

- Advertisement -

ரெட் அலர்ட் என்றால் என்ன ?

* குறைந்த நேரத்தில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கும் நிலையில் இந்த ரெட் அலர்ட் பிறப்பிக்கபடுகிறது.

-விளம்பரம்-

* மிக மிக மோசமான வானிலை நிலவும் என்பதை குறிக்க ரெட் அலர்ட் அறிவிக்கப்படும்

chennai

* ரெட் அலர்ட் அறிவிக்கப்படும் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* சாலை போக்குவரத்து பாதிக்கபடும், மின்சாரம் துண்டிக்கப்படும் இதனால் குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வேண்டும்.

* அதே போல பொது மக்கள் உள்ளூர் நிர்வாகம் மற்றும் அவசர நிலையை எதிர்கொள்ளும் அமைப்புகளின் அறிவுறுத்தல்களை கேட்க வேண்டும்.

Advertisement