விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் டாக்டர், அவர் இனிமேல் நடக்க முடியாது. அவருக்கு ஓய்வு தேவை என்றெல்லாம் சொல்வதால் எல்லோருமே அங்கேயே தங்கினார்கள். அப்போது சாவித்திரியை சந்தித்து ஈஸ்வரி ரொம்ப ஏளனமாக பேசிக் கொண்டிருந்தார். சித்ராவும் பதிலுக்கு சாவித்ரி-தாமரை இருவரையும் கிண்டல் செய்தார். அப்போது ஈஸ்வரி, இந்த நிலைமைக்கு எல்லாம் காரணம் நான் தான். நான் பிளான் செய்து உங்களை காமேஷ் பிச்சையிடம் சிக்க வைத்தேன் என்று சொல்லி சிரித்தார். இதை கேட்ட சாவித்திரி அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அதற்குப்பின் அப்பத்தா எல்லோருக்குமே சாப்பாடு உருண்டை பிடித்துக் கொடுத்தார்கள். இதை ஓரமாக நின்று பார்த்த சாவித்திரி கஷ்டப்பட்டார்

சாவித்திரி பசியோடு இருப்பதை பார்த்து அப்பத்தா சாப்பாடு கொடுத்தார். அதற்கு பின் எல்லோருமே அதே இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது வானில் எரிகள் போவதால் தமிழ்-சேது இருவரும் தங்களுடைய ஆசையை சொன்னார்கள். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி எழுந்து மீண்டும் தங்களுடைய பாத யாத்திரையை தொடங்கினார்கள். அப்பத்தா, நானும் நடக்கிறேன் என்றார். எல்லோரும் வேண்டாம் என்று சொல்லியுமே அப்பத்தான் கேட்கவில்லை. வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக முருகனின் பாட்டை பாடிக்கொண்டு நடக்கிறார்கள்
சின்ன மருமகள்:
தமிழும், அப்பத்தாவுடன் சேர்ந்து நடந்து வந்தார். கோயில் நெருங்கும் நேரத்தில் அப்பத்தா மயக்கம் போட்டு விழுந்து விட்டார். எல்லோருமே பதறி விட்டார்கள். எல்லோருமே பரிகாரம் நின்று விடுமோ? என்று பயத்தில் இருந்தார். அந்த சமயம் பார்த்து முருகருடைய ஊர்வலம் வருகிறது. அப்போது அந்த கோயில் பூசாரி, நீங்கள் இருப்பது முருகன் சன்னதியில் தான். இன்னும் ஐந்து நிமிடத்தில் கிரகணம் முடிய போகிறது. உங்கள் மனதில் இருக்கும் குறைகளை எல்லாம் முருகனிடம் சொல்லுங்கள் என்றார். பின் ராஜாங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே முருகனை கும்பிட்டு தங்களுடைய பரிகாரத்தை முடித்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இன்று எபிசோட்டில் பாதயாத்திரியை முடித்துவிட்டு ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். ராஜாங்கம், எல்லோருமே தான் சொன்ன வார்த்தைக்காக பாதயாத்திரை நடந்ததற்காக நன்றி என்கிறார். இன்னொரு பக்கம் சாவித்திரி, ஈஸ்வரியின் சதி செய்து தான் திருமணம் நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சொல்கிறார். இதனால் தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. அப்போது வந்த காமேஷிடம் சாவித்திரி- தாமரை இருவரும் கேட்கிறார்கள். காமேஷ், நான் உண்மையாலுமே தாமரையை காதலிக்கிறேன் என்றெல்லாம் டயலாக் பேசுகிறார். இதனால் தாமரை இன்னும் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் சேது- தமிழ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்கிறார்கள்.
https://www.youtube.com/watch?v=kZJy6285SDk
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்செல்வி, நான் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டேன். என்னால் உயிர் போய்விட்டது என்று சின்ன பிள்ளை போல் அடம்பிடித்து அழுது கொண்டிருக்கிறார். சேதுவிற்கு ஒன்னும் புரியவில்லை. பின் சம்பந்தமே இல்லாமல் தமிழ்ச்செல்வி கத்துகிறார், கோபப்படுகிறார், அழுகிறார். இதையெல்லாம் பார்த்து சேதுவால் எதுவும் பேச முடியாமல் மண்டையை உடைத்து கொண்டு இருக்கிறார்.






