தோழியின் போனை எடுத்ததால் மலர்ந்த காதல் – காமெடி நடிகர் பாலா சரவணனின் அழகிய காதல் கதை.

0
868
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் பாலசரவணன். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு பின் இவர் வெள்ளித்திரையில் சென்று பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த குட்டிபுலி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஈகோ, திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம், கூட்டத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது காதல் கதையை பற்றிபேசி இருந்தார். அதில், எனது நெருங்கிய தோழி சூர்யா. பள்ளி பருவத்தில் இருந்தே நாங்கள் ரத்த பந்தம் இல்லாத உறவினர்களாகவே பழகினோம். அப்போது அவர் எனது குடுபதினரிடம் எப்படி அன்பு செலுத்தினாரோ தற்போதும் எனது குடும்பத்தினரிடம் மாறாத அதே நட்புடன் தான் பழகி வருகிறார்.பொதுவாக எனக்கு அதிகமான நண்பர்கள் கிடையாது. கிட்டத்தட்ட பத்து நண்பர்கள் தான் இருந்தார்கள்.

- Advertisement -

அதில் ஒருவர் தான் சூரியா. அதனால் அவருக்கு வாரத்தில் ஒரு இரண்டு முறை கால் செய்து பேசும் பழக்கம் உண்டு.அப்படி ஒரு முறை கால் செய்யும்போது தான் எப்போதும் இல்லாத குரல் ” யாரு பேசுறீங்க” என்று கேட்டது. அந்த குரல் கேட்பதற்கு ரொம்பவே இனிமையாக இருந்தது. இதுவரை கேட்காத குரலாக இருந்ததால் ” நீங்க யாரு பேசுறீங்க” என்று நான் கேட்டேன்.” நா சூர்யா ஓட ரூம் மேட்” என்று பதில் வந்தது.

இப்படி எனது தோழி சூர்யா மூலம் அறிமுகம் ஆனவர் தான் எனது காதல் மனைவி. பிறகு நான் சூர்யா கிட்ட அவசரமா பேச வேண்டிருக்கு போன் அவுங்க கிட்ட குடுக்க முடியுமா என்று கேட்டேன். உடனே “முடியாது, அவ கேண்டீன்ல இருக்கா வந்ததும் பேச சொல்றேன்னு” பதில் வந்தது. ஒரு ரூம் மேட்க்கு இந்த உதவி கூட செய்ய முடியாத என்று தொடங்கி வாடி போடி என்று பேசும் அளவிற்கு எனக்கு கோவம் வந்துவிட்டது. உடனே அந்த பெண் போனை கட் செய்து விட்டார்.

-விளம்பரம்-

சிறிது நேரம் கழித்து எனது தோழி சூர்யா கால் செய்து ஏன் இப்படி செஞ்ச என்னோட ரூம் மேட் ஹேமா நீ பேசுனதுக்கு அழுகுற என்று கூறினார். அதனால அவ கிட்ட சாரி கேளு என்று கூறினார். நான் என்மீது தவறு இல்லை என்று விளக்கம் அளித்தேன்.பின்னர் ஹேமா மீது எனக்கு வந்த காதல் உணர்வை நேரடியாக சொல்ல முடிவு செய்தேன். அதன் படி நான் சொல்லி விட்டேன். இரண்டாம் ஆண்டு என்ஜினியரிங் படிக்கும்போதே காதல் செய்ய தொடங்கியது.

ஆனால் காதலிக்க ஆரம்பித்து 7 ஆண்டுகளுக்கு பிறகு பல போராட்டங்களை சந்தித்து தான் என்னால் அவரை திருமணம் செய்ய முடிந்தது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்ற காதலர் தினத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கி நடிகர் பால சரவணன் அளித்துள்ளார். இது குறித்து அவரது மனைவி ஹேமா தனது இன்ஸ்டாகிராமில் கூறிய போது, ‘வாழ்க்கை என்பது நாம் கற்பனை செய்து பார்ப்பதை விட மிகவும் அழகானது. என்னுடைய கணவர் எனக்காக புதிய ஹூண்டாய் கார் வாங்கி பரிசளித்து உள்ளார், அவருக்கு எனது நன்றி’ என தெரிவித்துள்ளார். மேலும் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் காரில் செல்லும் வீடியோவையும் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement