அதற்கு ஒத்துக்கொண்டு எப்படி மேல் முறையீடு செய்யலாம் – மன்சூர் அலிகான் மீது கடுப்பான நீதிமன்றம்

0
381
Mansoor
- Advertisement -

மன்சூர் அலிகான் மேல்முறையீட்டு செய்த மனுவிற்கு தடை விதித்து நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் மன்சூர் அலிகான். கடந்த ஆண்டு சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருந்தது . அதாவது, பேட்டியில் மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. லியோ படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம்.

-விளம்பரம்-

லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் மீது புகார்:

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று செய்து கோரிக்கை வைத்திருந்தார்கள். இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின் இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தார்கள். பின் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் அதிரடியாக ஆஜராகி பத்திரிகையாளர்களை சந்தித்து இருந்தார்.

திரிஷா மீது வழக்கு:

அதில் மன்சூர் அலிகான், நான் திரிஷா என்பவரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசவில்லை.
ஒரு நடிகையாக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷா குறித்து நான் பேசிய முழு வீடியோவையும் பாருங்கள். என்னை பழிவாங்கும் நோக்கில் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. என் மீது வீண்பழி சுமத்திய திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று கூறி இருந்தார். இதனை அடுத்து மன்சூர் அலிகான், திரிஷா மீது ஒரு கோடி ரூபாய் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் மான நஷ்ட வழக்கு தொடர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகானுக்கு போட்ட அபராதம்:

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்திற்காக தான் மன்சூர் அலிகான் இதையெல்லாம் செய்திருக்கிறார். இதனால் மன்சூர் அலிகான் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த அபதாரம் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் கட்ட வேண்டும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் இந்த வழக்கை மேல்முறையீடு செய்து இருக்கிறார்.

நீதிபதி உத்தரவு:

இதனால் நீதிபதிகள் ஆர் மகாதேவன், சபிக் அடங்கிய அமர்வுகள் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அபராத தொகையை செலுத்துவதாக ஒத்து கொண்டு, குறிப்பிட்ட காலம் சொல்லிவிட்டு எப்படி மேல்முறையீடு செய்ய முடியும்? என்று நீதிபதிகள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை மன்சூர் அலிகான் செலுத்த முடியுமா? முடியாதா? என்பதை தனி நீதிபதி முன்பு தெரிவிக்க வேண்டும். பின் மன்சூர் அலிகான் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து இந்த வழக்கை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்து வைத்திருக்கிறது.

Advertisement