திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே பிரபல இயக்குனரை விஜய் பட பிரபலம் விவாகரத்து செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமா பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், திருமணம் ஆன சில வருடங்களில் விவாகரத்து செய்து வருகிறார்கள். இது சமீப காலமாக அதிகமாக நிலவி வருகிறது.
திருமணம் செய்து பல வருடங்களாக வாழ்ந்து வந்தாலும் சரி, சில ஆண்டுகளானாலும் சரி விவாகரத்து செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் இருவரிடமே புரிதல் இல்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் விஜய் பட பிரபலம் திடீரென்று விவாகரத்து செய்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஜாய் குறித்த தகவல்:
அவர் பெயர் ஜாய் கிரிசில்டா. தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தில் விஜய்க்கு ஸ்டைலிஸ்டாக இருந்தவர் தான் ஜாய். இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். முதல் படத்தில் இவருடைய செயலை பார்த்து பலருமே பாராட்டிருந்தார்கள். இதை தொடர்ந்து இவர் ராஜதந்திரம், டார்லிங், மிருதன், வேலைக்காரன், உள்குத்து, கணிதன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
ஜாய் விவாகரத்து:
பின் இவர் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஜே ஜே பெட்ரிக்கை நீண்ட நாட்களாக காதலித்து இருந்தார். மேலும், இருவருமே 2018 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.
ஜாய் பதிவு:
இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் இருவருமே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இதை ஜாய் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து ஜாய், நாங்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிக்கிறோம். எனக்கு எப்போது போல் நண்பர்கள் மற்றும் என் உறவினர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். அதேபோல் விவாகரத்து என்பது தோல்வி அல்ல.
ஜாய் செய்யும் தொழில்:
அது அடுத்த கட்டத்திற்கான ஆரம்பம் என்று கூறி வருகிறார். மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பேஷன் டிசைன்களில் மட்டும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வந்தார். ஆனால், இனி தற்போது விவாகரத்துக்கு பிறகு இவர் ஸ்டைலிஷ் பணிகளில் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் தான் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.