இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார்.
இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், என்ஜிகே போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது.
செல்வராகவன் குறித்த தகவல்:
இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன் பின் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருகிறேன் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. கடந்த ஆண்டு தனுஷ் இயக்கி நடித்திருந்த ராயன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார்.
செல்வராகவன் இயக்கும் படங்கள்:
அந்த வகையில் தற்போது இவர் 7ஜி ரெயின்போ காலனி படத்தினுடைய இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் இயங்கி கொண்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆயிரத்தில் ஒருவன் படத்தினுடைய இரண்டாம் பாகத்திற்கான வேலையிலுமே செல்வராகவன் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் அவர் வாழ்க்கை அனுபவங்கள், சமூக அக்கறைகள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.
செல்வராகவன் வீடியோ:
இந்த நிலையில் தற்போது செல்வராகவன் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், நீங்கள் ஒரு லட்சியம் வைத்துக் கொண்டு அதை நோக்கி ஓடிக் கொண்டிருந்தால் நல்லது தான். அதை ஏன் ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிறீர்கள்? வறவன், போரவன் என எல்லோரிடமும் நான் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? என்று சொன்னால் அந்த காரியம் விளங்காமலே போய்விடும். நீங்க சொன்னால் சந்தோஷப்படுவாங்க என்று நினைக்கிறீர்கள். இந்த உலகத்தில் யாரும் எதுக்காகவும் மற்றவர்களை பார்த்து சந்தோஷப்படுவதில்லை.
செல்வராகவன் சொன்ன அறிவுரை:
அமைதியாக இருங்கள், அமைதியாக வேலை செய்யுங்கள், அமைதியாக போங்க, வாங்க, உங்கள் லட்சியத்தை யாரிடமும் சொல்லாதீர்கள். உன் வீட்டில் கூட சொல்லி தம்பட்டம் அடித்துக் கொள்ளாதீர்கள். அதே மாதிரி யாரிடமும் எதுக்காகவும் உதவி கேட்டு நிற்காதீர்கள். சின்ன உதவி பண்ணாலும் ஆயுள் முழுக்க சொல்லிக் காண்பிப்பார்கள். என்னால் தான் அவன் பெரிய ஆளானான். அவனுக்கு நான் இந்த உதவி செய்தேன் தெரியுமா? என்று ஒரு ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு ஆயிரம் கோடிக்கு உதவி பண்ண மாதிரி பேசுவார்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.