சின்மயி சொன்ன ஒரு பொய்யால டப்பிங் யூனியனுக்கு தண்ட செலவு -டப்பிங் யூனியன் ராஜேந்திரன்

0
300
- Advertisement -

சின்மயி சொன்ன ஒரு பொய்யால் பல லட்சங்கள் வீண் செலவு என்று டப்பிங் யூனியன் ராஜேந்திரன் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் அடுத்த மாதம் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால், இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று ராதாரவி விலகி விட்டதாக கூறப்பட்டது.

-விளம்பரம்-
Chinmayi-vairamuthu

இதனால் ராதாரவியின் ஆதரவில் கதிரவன் என்பவர் தலைவர் போட்டிக்கு போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் ராதாரவியுடன் நீண்ட காலமாக டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருந்தவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் இந்த தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ராஜேந்திரனுக்கு யூனியன் உறுப்பினர்கள் மத்தியில் நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

டப்பிங் யூனியன் ராஜேந்திரன் பேட்டி:

இதனால் கதிரவன் தோற்றுவிடுவார் என்பதாலே மீண்டும் ராதாரவியே தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக ராஜேந்திரன் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் அண்ணன் ராதாரவியை எதிர்த்து போட்டியிடவில்லை. அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததை பயன்படுத்தி பொறுப்பில்லாத சில பேர் இந்த பதவிக்கு வர முயற்சி செய்தார்கள். இதனால் நான் தலைவர் பதவியில் போட்டியிட தயாரானேன். ஆனால், அந்த சிலருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

ராதாரவி குறித்து சொன்னது:

அதனால் தான் திரும்ப ராதாரவி அண்ணனிடம் பேசி இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இனி நான் என் முடிவிலிருந்து பின் வாங்குவதாக இல்லை. ஏனென்றால், தேவையில்லாத எவ்வளவோ பிரச்சனைகளை சங்கம் சந்தித்திருக்கிறது. அதற்கெல்லாமே அந்த ஒரு கும்பல் தான் காரணம். அண்ணன் ராதாரவி அவர்கள் பேச்சை மட்டுமே கேட்பதால் முன் இருந்த ஆளுமை அவரிடம் இப்போது இல்லை. அதனால் தான் இந்த போட்டி தவிர்க்க முடியாமல் இருக்கிறது. அதேபோல் டப்பிங் யூனியன் கட்டிட விவகாரத்தில் நான் நியாயமாக குரல் கொடுத்தேன்.

-விளம்பரம்-

சின்மயி குறித்து சொன்னது:

அடுத்த நிர்வாகம் வரும் போது கட்டிட விவகாரத்திற்கு நல்ல ஒரு முடிவு வரும். மேலும், சின்மயி ஒரு சாதாரண உறுப்பினராக தான் சேர்ந்தார். சந்தா புதுப்பிக்க சொன்னபோது, நான் லைஃப் மெம்பர். சந்தா புதுப்பிக்க தேவையில்லை என்று சொன்னார். அவர் சந்தா செலுத்தாததால் உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் இந்த விவகாரம் கோர்ட் வரைக்கும் போனது. நீதிமன்றமும் சங்க நடவடிக்கை சரி என்று தீர்ப்பும் தந்தது. ஆனால், சின்மயி சொன்ன ஒரு பொய்யால் யூனியன் நடத்திய இந்த வழக்கில் சில லட்சங்கள் செலவானது தான் மிச்சம்.

லோகேஷ் குறித்து சொன்னது:

அவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. ஆனால், அவரை டப்பிங் யூனியனில் பயன்படுத்தியது தவறு. லோகேஷ் கனகராஜ், யூனியன் கினியன் அதெல்லாம் விடுங்க. நீங்க பேசுங்க பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி அவரைப் பேச வைத்திருக்கிறார். கோட்டு தீர்ப்பு வந்த பிறகு சின்மயி திரும்ப உறுப்பினராக சேர்ந்து இருக்கலாம். அதையும் அவர் பண்ணவில்லை. லோகேஷ் கனகராஜ் செய்தது ரொம்ப தவறு என்றெல்லாம் பேசி இருக்கிறார். இவர் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக வைரலாக்கப்பட்டு வருகிறது.

Advertisement