பிசினஸ்மேன் டூ சீரியல் – எதிர்நீச்சல் எஸ் கே ஆர் யார் தெரியுமா ? இதோ அவரின் குடும்பம்.

0
2772
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் எஸ்கேஆர் குறித்து பலரும் அறிந்திடாத தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று சன் டிவி எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

சீரியலின் கதை:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சில மாதங்களாகவே சீரியலில் ஆதிரை- அருண் குறித்த காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரை- அருண் திருமணத்தை எப்படியாவது நடத்தி வைக்க வேண்டும் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோரும் திட்டம் போடுகிறார்கள். கடைசியில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது.

-விளம்பரம்-

சீரியலில் டீவ்ஸ்ட்:

இனி கரிகாலனுடன் சேர்ந்து வாழ்வாரா ஆதிரை?அருணின் நிலைமை என்ன? குணசேகரனின் எண்ணம் நிறைவேறுமா? ஜனனி என்ன செய்து போகிறார்? என்று பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் ஆதி குணசேகரனுக்கு வில்லனாக எஸ் கே ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் வாசுதேவன். இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரத்திற்கு பெரிதாக டயலாக் இல்லை என்றாலும் இவருடைய உடல் மொழியினால் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

எஸ்கேஆர் குறித்த தகவல்:

இந்நிலையில் இவரை குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். எஸ்கேஆரின் உண்மையான பெயர் வாசுதேவன். இவர் கேரளாவை சேர்ந்தவர். எதிர்நீச்சல் சீரியலில் இவர் எப்படி மிகப்பெரிய தொழிலதிபரோ நிஜத்திலும் இவர் பெரிய பிசினஸ்மேன் தான். தற்போது இவர் சென்னையில் செட்டில் ஆகி இருக்கிறார். இவருக்கு நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு. இப்படி ஒரு நிலையில்தான் இயக்குனர் திருச்செல்வத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. அவரும் சீரியலில் உங்களை போல ஒரு கதாபாத்திரம் வேண்டும் என்று வாசுதேவனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பிறகு தான் வாசுதேவனும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க ஒப்புக் கொண்டார். அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் வெள்ளி திரையிலும் இவர் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

Advertisement