‘விவாகரத்து படிவத்தில் கையெழுத்து போட்டேன், இப்போது கொஞ்சம் பாசிட்டிவ்வா போகுது’ – எதிர்நீச்சல் பிரபலம்.

0
884
Ethirneechal
- Advertisement -

விவாகரத்து படிவத்தில் கையெழுத்து போட்டு விட்டேன். இனி பாசிட்டிவாக தான் இருக்கும் என்று எதிர்நீச்சல் சீரியல் நடிகர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். தற்போது சீரியலில் அருண்- ஆதிரை திருமணம் நடக்க பல டிவிஸ்டுகள் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலருமே விரும்பி பார்த்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சபரி பிரசாந்த். இந்த சீரியல் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகிறது. தற்போது இவருடைய கதாபாத்திரம் பாசிட்டிவாக சென்று கொண்டிருப்பதால் பலரும் சக்தி கதாபாத்திரத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

சபரி பிரசாந்த் அளித்த பேட்டி:

இந்நிலையில் நடிகர் சபரி பிரசாந்த் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய பெயர் சபரி பிரசாந்த் என்று யாருக்குமே தெரியாது. எதிர்நீச்சலில் வரும் சக்தியாக தான் பலரும் என்னை அழைக்கிறார்கள். இங்கு மக்கள் காட்டும் அன்பையும், ஆதரவையும், பாசத்தையும் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருக்கிறது. நான் நிஜத்தில் கொஞ்சம் அமைதியானவன் தான். ஆனால், சீரியலில் வரும் சக்திக்கும் என்னுடைய குணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. என்னுடைய மனைவி பெயர் கிருத்திகா.

-விளம்பரம்-

தன்னுடைய மனைவி குறித்து சொன்னது:

நாங்கள் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்தோம். பள்ளியில் தான் எங்களுக்கு அறிமுகம் ஆனது. பின்னர் கல்லூரி காலத்தில் தான் எங்களுடைய நட்பு காதலாக மாறியது. எங்களுடைய காதலை குறித்து வீட்டில் பேசி திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு முடிவடைந்து இருக்கிறது. என்னுடைய மனைவி ஐடியில் பணிபுரிந்து வருகிறார். நான் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கேரியருக்கு என் மனைவி எப்போதும் தடையாக இருந்ததில்லை. மீடியாவுக்குள் ஒரு கிரியேட்டராக வரவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். ஆனால், நடிகராக வந்ததற்கு காரணம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி பார்க்கலாம் என்று தான்.

சீரியல் குறித்து சொன்னது:

மற்றபடி எனக்கு நடிப்பதை விட கிரியேட்டராக வரவேண்டும் என்பதுதான் ஆசை. மேலும், எனக்கு பெண் ரசிகைகள் நிறைய இருப்பதால் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வரும். பிறகு இதுதான் என்னுடைய தொழில் என்று அவர் புரிந்து கொண்டார். நான் வெளியே போனால், சக்தி எப்படி பண்றீங்க? உங்க அண்ணன் பேச்சைக் கேட்டு பொண்டாட்டிய ஏன் டார்ச்சர் பண்ணுறீங்க? ஜனனியை விவாகரத்து பண்ணுவேனா? இல்லையா? என்று கேட்பார்கள். சீரியலில் அடுத்து என்ன நடக்கும்? என்று எனக்கு தெரியாது. இயக்குனருக்கு தான் தெரியும். சீரியலில் விவாகரத்து படிவத்தில் நான் கையெழுத்து போட்டது உண்மைதான். ஆனால், அது பாசிட்டிவாக போகுமா? எப்படி போகும்? என்று தெரியாது. பொறுத்திருந்து பார்க்கலாம். சீரியலில் என்னுடன் நடிக்கும் எல்லா நடிகர்களுமே எனக்கு ரொம்ப க்ளோஸ் ஆகி விட்டார்கள் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement