சாப்பாட்டுக்கு என்ன செய்றாளோ தெரியல ? தன்னந்தனியாக வாழ்ந்து வரும் கனகா குறித்து கங்கை அமரன் உருக்கம்

0
2349
- Advertisement -

நடிகை கனகாவின் தற்போதைய நிலை குறித்து மனவேதனையில் கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராகவும், பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு வலம் வருபவர் கங்கை அமரன். இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. கங்கை அமரன் 1979 ஆம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த புகைப்படம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்த படம் 1989ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. கரகாட்டக்காரன் படம் வெளியாகி 35 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி கங்கை அமரன் பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

கங்கை அமரன் பேட்டி :

அதில் அவர் கனகா குறித்து கூறியிருந்தது, கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால், இன்றும் அந்த படத்தை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள். இந்த படம் எனக்கு தானாக அமைந்தது. என்னுடைய அண்ணன் முதல் நாள் படம் பார்த்துவிட்டு அடுத்த நாள் ரெக்கார்டிங் பண்ணுவார். ஆனால், கரகாட்டக்காரன் படம் மட்டும் தான் கதை கேட்காமல் இசையமைத்து பின்னணி போட்டார். இந்த படம் ஒரு ஆண்டுக்கு மேல் ஓடியது. இதை பார்த்து என்னுடைய அண்ணனே அசந்து போய்விட்டார். அதுவும் கிளைமாக்ஸ்ஸில் வரும் மாரியம்மன் பாடலுக்கு தியேட்டரிலேயே பலரும் சாமி வந்து ஆடி இருந்தார்கள்.

கரகாட்டக்காரன் படம் குறித்து சொன்னது:

இந்த அளவிற்கு இந்த படம் வெற்றி பெறும் என்று நான் நினைக்கவே இல்லை. மேலும், அந்த படத்தில் கனகாவை நான் தான் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தேன். அப்போ என் வீட்டுக்கு பக்கத்தில் தான் நடிகை தேவிகாவின் வீடும் இருந்தது. தன் மகளை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என்று தேவிகா அம்மா ஆசைப்பட்டார்கள். பின் அவரை என் பார்வையில் தெரியும்படி வைத்தார். கனகாவுக்கு பட்டுப்பாவாடை தாவணி போட்டு என் வீடு வழியா அடிக்கடி வாக்கிங் கூட்டிட்டு வருவார்கள். ஒரு நாள் நான் என் வீட்டுக்கு கூப்பிட்டு நானும் என் மனைவியும் பேசினோம்.

-விளம்பரம்-

சினிமாவில் கனகா அறிமுகம்:

பின் இந்த பொண்ணு லட்சணமாய் இருக்கா என்று என் மனைவி சொன்னதால் தான் நான் கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தேன். ஆனால், அந்த படத்தில் பானுப்ரியாவை நடிக்க வைக்கணும் என்று தான் நானும் இளையராஜாவும் நினைத்தோம். அந்த படத்தோட வெற்றிக்கு கனகாவின் நடிப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், தற்போது கனகா ஆதரவில்லாமல் இருக்கும் செய்திகளை கேட்டேன். இரண்டு மூன்று முறை நான் போன் செய்தேன். அவள் எடுக்கவில்லை. வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அவளுக்கு அனுப்பினேன். அப்போதும் அவர் என்னை அழைக்கவில்லை. தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் முடிவு செய்துவிட்டாள்.

கனகா குறித்து சொன்னது:

அவளுடைய வாழ்க்கையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அவள் எண்ணம் எல்லாம் அதுதான் நிறைந்திருக்கிறது. ஏதோ ஒரு தோல்வியை அவர் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார். அதனால் தான் யாருமே தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டாள். எனக்கு அவளை பார்க்க வேண்டும் என்று ஆசை. இந்த நேரத்தில் தான் ஆதரவு தர வேண்டும். ஆனால் அவள் அழைக்க மாட்டார். இந்த பேட்டியை பார்த்தால் ஆவது அவள் என்னை அழைக்க வேண்டும். வீட்டு கதவையும் பூட்டிவிட்டாள். யாரும் உள்ளே போக முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. யார் சென்றாலும் அவளுக்கு தெரியாது. சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாள்? என்பது கூட தெரியவில்லை. வீட்டிற்குள் எப்படி போவது என்றே தெரிய வில்லை. எதற்கு ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? பாவம்! அவளை எப்படி சரி செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. பேசாமல் என்னை பார்சல் செய்து அவள் வீட்டுக்கு அனுப்பி விடலாம். அப்படியாவது அவளை பார்த்து விடலாமா? என்று வேதனையில் கூறியிருக்கிறார்.

Advertisement