கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்பி ஜோதிமணியிடம். கிராமத்தை சேர்ந்த பிரமுகர் வாக்கு வாதம் செய்தார். அது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினத்தை ஒட்டி கரூர் அருகே உள்ள மூங்கனாங்குறிஞ்சி ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் வரும் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டார்.
கிருஷ்ணயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முங்கனம் குறிஞ்சி கந்தசாரப்பட்டு பகுதியில் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. என்ன கிராமத்து கூட்டத்தில் பகுதியைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அதில் வாக்குவாதம் செய்த இளைஞர் கூறுகையில். தேர்தல் நேரம் வரும் போது மட்டும் எங்களை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இந்தப் பகுதியில் வாக்கு கேட்க மட்டும் வந்தீர்கள் அதன் பிறகு உங்களை இந்த பகுதியில் நாங்கள் பார்க்கவே இல்லை நன்றி சொல்ல கூட இந்த பக்கம் நீங்கள் வரவில்லை என்று காட்டுமாக வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தார்.
அதற்கு பதில் தெரிவித்த எம்பி ஜோதிமணி இந்த தொகுதி உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நன்றி கூற வந்துள்ளேன் நீங்க வேண்டுமென்று என்னிடம் வாக்குவாதம் செய்கிறீர்கள் என்று கூறினார். இந்நிலையில் கண்டுகொள்ளாத அந்த நபர் மேலும் மேலும் ஜோதிமணியிடம் கேள்விகளை அடுக்கி வந்தார். ஒரு எம்பி என்ற முறையில் போன் செய்தார் ஒரு முறையாவது ஃபோன் எடுக்கிறீர்களா எம்.பி என்ற முறையில் யாரிடம் முறையிடுவது என்றும் வினாவினார்.
Karur people started questioning MP Jothimani for not visiting the constituency in the past 4.5 years. Madam, pls concentrate more on people welfare activities than praising Rahul Gandhi & Co ! pic.twitter.com/ABCWcpCmCC
— G Pradeep (@pradeep_gee) August 17, 2023
எம் பி ஜோதிமணி கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6600 கிராமங்களுக்கும் நான் சென்று நன்றி கூறி வந்தேன். மேலும் அவர்களுக்கு மனக்களையும் பெற்று வந்துள்ளேன். நீங்கள் வேண்டுமென்று என்னிடம் வாக்குவாதம் செய்து வந்தீர்கள் என்று கூறினார். கிராம சபை போர்ட் கூட்டத்தில் கூடிய இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் சூழ்ந்த கால பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அந்த நபரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
எம் பி ஜோதிமணி பதில்
கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6600 குக்கிராமங்களுக்கும் நான் சென்று நன்றி கூறி வந்தேன். மேலும் அவர்களுக்கு மனுகளையும் பெற்று வந்துள்ளேன். நீங்கள் வேண்டுமென்று என்னிடம் வாக்குவாதம் செய்து வந்தீர்கள் என்று கூறினார். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பஞ்சாயத்து தலைவர் போல் ஒவ்வொரு முறையும் இங்கு வர முடியாது. பேசியதை மேலும் மேலும் திரும்பத் திரும்ப பேசாதீர்கள் ஒரு எம்பி 100 நாட்கள் வரை பார்லிமென்ட்க்கு செல்ல வேண்டும்.
மேலும் 50நாட்கள் வரை கமிட்டி கூட்டங்களுக்கு. இதற்கு இங்கு இருந்து சென்று வர ஒரு நாள் ஆகிவிடும் எனப் பேசிக்கொண்டு அந்த கேள்வி கேட்ட நபருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின் அவரை சமாதான படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது.