இந்த ஆண்டின் கடைசி நாளில் கூட இப்படியா – கனா காணும் காலங்கள் நடிகர் திடீர் மரணம்.

0
663
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த பல கலைஞர்களை இந்த 2023 ஆம் ஆண்டு இறந்து இருக்கிறார்கள். சின்னத்திரை, வெள்ளித்திரை என்று பல பிரபலங்களை ரசிகர்கள் இழந்து இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அதிர்ச்சியை கோலிவுட் வட்டாரத்தில் கொடுத்திருக்கிறது. மனோ பாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர் எஸ் சிவாஜி, ஜூனியர் பாலையா, போண்டாமணி போட்ட பல பிரபலமான நடிகர்கள் இந்த ஆண்டு உடல்நல குறைவால் இறந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களின் இழப்பு பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் மக்களுக்குமே பேர் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களுடைய இழப்பிலிருந்து நீங்காத நிலையில் தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்திருந்த மதுரை மோகன் சமீபத்தில் இறந்தார். இவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “காற்றுக்கென்ன வேலி” சிரியல் நடிகர் ஹரி இறந்து இருந்தார்.

- Advertisement -

பிரபலங்கள் இறப்பு:

இவர் இந்த சீரியலில் கதாநாயகி வெணிலாவின் காலேஜ் நண்பராக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் ஹரி நடித்திருப்பார். இவர் பல நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடியுள்ளார். அதோடு இவர் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இவர்களின் மறைவு ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் கேப்டன் விஜயகாந்தின் இறப்பு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

விஜயகாந்தின் இறப்பு:

சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். பின் சில தினங்களுக்கு முன் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருக்கின்றார்கள்.

-விளம்பரம்-

அன்பழகன் குறித்த தகவல்:

விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரபல சீரியல் நடிகர் அன்பழகன் திடீரென்று இறந்திருப்பது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்ற கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இருந்தார். இந்த சீரியலில் இவர் பிடி வாதியாராக நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அன்பழகன் இறப்பு:

அதனை தொடர்ந்து இவர் ரெட்டைவால் குருவி, தாயுமானவன் போன்ற சில சீரியல்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதாராமன் சீரியல்களில் நடித்து இருக்கிறார். இந்த இரு சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர் உடல்நல குறைவால் இருந்திருக்கிறார். இவருடைய இறப்பு சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இவருடைய மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினர்களும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement