தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி!

0
1890
Tamilisai - karthick naren
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

-விளம்பரம்-

இது தொடர்பாக தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார் .மெர்சல் படத்தில் நடிகர் விஜய் 5 ரூபாய் டாக்டர் பெறவேண்டும் மற்றும் போலி டாக்டர்களை விமர்ச்சிப்பது போல ஒரு காட்சி இப்படத்தில் உள்ளது .இதுவும் தவிர்த்து மருத்துவர்களை இழிவு படுத்துவதாக உள்ளதாக தமிழிசை ஒரு டிவிட் செய்து உள்ளார்.
Tamilisai அவர் டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:
மெர்சல் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் மருத்துவர்களை கேலி பேசுகிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை ஊழல்வாதிகளாகக் காட்டுகிறது. மருத்துவர்கள் 5 ரூபாய் கட்டணம் எடுத்துக்கொள்ள வேண்டும் அதே வேளையில் நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவார்களா?” என்று பதிவிட்டார்.இந்த ட்வீட்டிற்கு இயக்குநர் கார்த்திக் நரேன் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

துருவங்கள் 16″ படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் அவர் கூறியதாவது.
Karthick Naren“தவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும். ஏன் சில அரசியல்வாதிகள் நடிகர்களை விட அதிகப் பணம் சம்பாதிக்கிறார்களே. அவர்களை கேட்கலாமே?” என்று தெரிவித்துள்ளார்

Advertisement