தமிழகத்தில் நேற்று தூத்துக்குடியில் நடந்த கொடூரமான சம்பவத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிசூட்டில் 11 உயிர்கள் பலியாகின. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல விஷயங்களுக்கு வாய் திறக்காத நடிகர்கள் கூட இந்த கொடுரமான தாக்குதகுக்கு ட்விட்டரில் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால எதற்கு ஒரு அரசாங்கம் ?
நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே #SterliteProtest
— Vijay Sethupathi ◽️ (@i_vijaysethu) May 22, 2018
விஜய் சேதுபதி:- சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால எதற்கு ஒரு அரசாங்கம் ? நியாபகம் இருக்கட்டும் கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே.என்று பதிவிட்டுள்ளார்.
ஜெயம் ரவி:- ஒருவரது உயிரை எடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடத்தப்பட்ட கொலைக்கு நான் எனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். உயுரிழந்தோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்த்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஹரிஷ் கல்யாண் :- தூத்துக்குடியில் நடந்த இந்த மனித நேயமற்ற செயலுக்கு அரசாங்கமும் காவல் துறையினரும் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும். நமது நாடு எங்கே போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
Who gives one human the right to take the life of another? Strongly condemn the mass killing of innocents during the #SterliteProtests My heartfelt condolences to the families of the victims.
— Jayam Ravi (@actor_jayamravi) May 22, 2018
தூத்துக்குடியில் நடந்த இந்த மனித நேயமற்ற செயலுக்கு அரசாங்கமும் காவல் துறையினரும் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்ல வேண்டும். My heart goes out to the families of all the people who have lost their lives! What is our country turning into? #SaveThoothukudi #SterliteProtest
— Harish kalyan (@iamharishkalyan) May 22, 2018
தனுஷ்:- ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.என்று பதிவிட்டுள்ளார்.
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.
— Rajinikanth (@rajinikanth) May 22, 2018
தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2018
ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.தண்டிக்கப்பட வேண்டும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
— Dhanush (@dhanushkraja) May 22, 2018
Each and every bullet in the chests of dead protestors will come back to haunt this sham of a govt in Tamil Nadu. Deepest condolences and prayers for the murdered innocents and their families. What a dark day in our history. #SterliteProtest
— Siddharth (@Actor_Siddharth) May 22, 2018
சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரம் கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்… வரலாற்று பிழை செய்து விட்டீர்கள் #SterliteProtestMay22nd2018 #SterliteProtest pic.twitter.com/Z7CTJA6F3k
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2018
ELLATHAYAUM KONNUTTU NALLA ERUNGA……
— P.samuthirakani (@thondankani) May 22, 2018
It is shocking and painful.. my deepest heart felt condolences to the families of the people who died in tuticorin
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 23, 2018
பல்வேறு பொது மக்களும், அரசியல் பிரபலங்களும் இந்த சம்பவத்ங்கிற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறிவருகின்றனர். தங்களது உரிமைக்காக போராடினால் அநியாயமாக கொல்லப்படுவார்கள் என்று இதுவரை யாரும் கேள்விப்பட்டதில்லை. இதுகிறித்து தமிழக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.