விஜய் நடித்த 'மெர்சல் ' படத்தை சீனா நாட்டில் வெளியிட திட்டம்மிட்டுள்ளனராம். இந்த படத்திற்கான உரிமத்தை எச்.ஜி.சி என்டர்டைன்மன்ட் என்ற சீன தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெற்றுள்ளதாம். மேலும், இந்த படத்தை மாண்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற பிபான்(BIFAN) திரைப்பட விழாவில் ஆசிய அளவில் சிறந்த திரைப்படம் (Best Of Asian Cinema ) என்ற அங்கீகாரத்தை 'மெர்சல்' படம் பெற்றிருந்தது. அதே போல சர்வேதச அளவில் ஆண்டுதோருக்கும் IARA என்ற விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில் 'மெர்சல்' படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்று இருந்தனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றது நடிகர் விஜய் மட்டும் தான். இந்த விடயம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்திருந்த நிலையில், தற்போது "மெர்சல் " படம் சீனாவில் வெளியவப்போவதை எண்ணி படகுழுவினரும் ,விஜய் ரசிகர்களும் கொண்டாட்டத்தில் திகைத்து வருகின்றனர்.




