NINIல ஒரு வாரமாக நீங்க இல்லாம நல்லா இல்ல – புலம்பிய ரசிகர், கடுப்பாகி ரஷிதா சொன்ன பதில்.

0
6356
rachitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீப காலமாகவே சினிமா டைட்டல்களை மையமாக கொண்டு பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர் என்று சினிமா தலைப்புகளை வைத்து பல்வேறு சீரியல்கள் வந்தது. அதே போல ராஜா ராணி, கனா காணும் காலங்கள், ஆபீஸ், மௌன ராகம் என்று பல சீரியல்கள் இரண்டு பாகங்கள் வெளியானது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கிருவார் சீரியலும் இரண்டு பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-29.png

கடந்த சில நாட்களாக இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் வில்லனாக இருந்த முத்து ராசாவை யாரோ சுட்டு கொன்றுவிட்டனர்.கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?’ என்ற கேள்விக்குப் பிறகு இப்போது சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படும் கேள்வி, ‘முத்துராசுவைச் சுட்டது யாரு?’ என்பது தான். இப்படி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலில் இருந்து ரஷித்தா விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : ப்பா, தீபா அக்காவா இது ? பருவ வயதில் எவ்ளோ ஸ்லிம்மா இருந்திருக்காங்க பாருங்க.

- Advertisement -

ரஷிதாவிற்கு   கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் தான் அவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அ இதனால் ரஷிதாவிடம் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நீங்கள் சீரியலில் இருந்து விலகுகிறார்களா ‘ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துள்ள ரஷிதா, ஓஹோ இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. chill பண்ணுங்க. எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறியிருந்தார்.

சமீபத்தில் ரக்ஷிதா, தான் நடிக்கும் கன்னட படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் ரசிகர் ஒருவர், ஒரு வாரமா நாம் இருவர் நமக்கு இருவர்ல நீங்க இல்லாம ரோமா வருத்தமா இருக்கு என்று பதிவிட, அதற்கு ரக்ஷிதா, இது என் பிரச்சனை இல்ல. நீங்கள் இயக்குனர் மற்றும் கதை எழுதுபவரிடம் தான் இதை நீங்கள் கேட்க வேண்டும் என்று மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement