தஞ்சை பெரிய கோவிலை அவமதித்தாதா பிரபல நகை கடை ? – நயன் விளம்பரத்தால் எழுந்த சர்ச்சை. யூடுயூபர் வெளியிட்ட வீடியோ.

0
863
nayan
- Advertisement -

நடிகை நயன்தாரா தற்போதுதான் வாடகைத்தாய் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்திருக்கும் நிலையில் மீதும் இப்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் என பல நடிகர்களுடன் இணைத்து நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய O2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். ஆனால், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வியும் எழுப்பி இருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்திருந்தது. மேலும் இந்த பிரச்னை தமிழக அமைச்சர் வரை சென்றிருந்தது.இந்நிலையில் தற்போதுதான் மெதுவாக இந்த பிரச்சனைகளில் இருந்து நயன்தாரா வெளியில் வந்திருக்கும் நிலையில் மீண்டும் இவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழ் நாட்டில் பெருமைக்குரிய கட்டமைப்புகளில் ஒன்றாக கருதப்படும் தஞ்சாவூர் பெரியகோவில் 10ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தஞ்சையை ஆண்ட தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் அவர்களால் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட 1000 வருடங்களை தண்டி தற்போது வரை கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் தஞ்சை பெரியகோவிலை கட்டும்போதே அப்போது நிகழ்த்த பல நிகழ்விகளை கோவிலின் கல்வெட்டுகளில் பதிவிட ஆணையிட்டார் ராஜ ராஜா சோழன்.

-விளம்பரம்-

இதன் மூலம் கோவிலை கட்டமைத்த மக்களின் அணைத்து பெயர்களும், அதற்கு முன்னர் நடந்த பல நிகழ்விகளையும் அந்த கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் தமிழ் மக்களின் பல சரித்திர படைப்புகள் அடுத்தடுத்த படையெடுப்புகளில் அளிக்கப்பட்ட நிலையில் தஞ்சை கோவிலில் உள்ள கல்வெட்டுகள் நமக்கு அப்போது வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்கை முறைகள், அப்போது என்ன நடந்தது? யாரால் இந்த கோவில் கட்டப்பட்டது, யார் யாரெல்லாம் இந்த கோவிலை கட்ட உதவி செய்த்தனர்? என்ற பல தகவல்கள் அந்த கல்வெட்டுகளில் பதிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தனிஷ்க் என்ற தங்க நகைக்கடை விளம்பரங்களை செய்வதற்காக நடிகை நயன்தாரா புகைப்படத்தின் காலுக்கு கீழே தமிழ் மக்களால் போற்றப்படக்கூடிய தஞ்சாவூர் பெரியகோவிலின் நுழைவு வாயிலில் கல்வெட்டு இருப்பதை போல இருக்கும் புகைப்படத்துடன் ஒரு விளம்பரத்தை செய்திருந்தனர். மேலும் அந்த கல்வெட்டுகளில் சுடுகாடு என்று 9 முறை எழுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு அவர்களை பழிவாங்கி விட்டது என்று சோசியல் மீடியாவில் ஒருவர் இந்த விளம்பரத்தை கண்டித்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ வைரலாகவே பலரும் ஒரு நடிகையின் அதுவும் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகையின் புகைப்படத்திற்கு கீழே தஞ்சாவூர் பெரியகோவிலின் புகைப்படத்தை வைத்து அசிங்கப்படுத்தியதாக கடுமையாக விமரிசித்து வருகின்றனர். மேலும் இதனை போன்ற மற்ற நாடிகளில் இப்படி வரலாற்று பெருமையை செய்திருந்தால் அந்த நிறுவனமே முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கும் என்றும் நம்முடைய நாட்டில் தான் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கிறது என்றும் தங்களுடைய ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement