300கிலோ போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் : சரத்குமாருக்கு சம்மன் அனுப்பிய என்ஐஏ.

0
481
Varalakshmi
- Advertisement -

போதைப்பொருள் வழக்கில் நடிகை வரலட்சுமியை நேரடியாக ஆஜராக வேண்டும் என்று என்.ஐ .ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப்பொருட்கள், ஆயுதங்களை ஆதி லிங்கம் என்பவர் கடத்திருக்கிறார். இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள். மேலும், போதைப்பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் ஏற்கனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தற்போது 14வது நபராக ஆதி லிங்கம் கைது செய்து இருக்கிறார்கள். இதனை அடுத்து இவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறது. அப்போது ஆதி லிங்கம் நடிகை வரலட்சுமி இடம் உதவியாளராக இருந்தது தெரிய வந்திருக்கிறது. பின் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகர் குணசேகரன் என்பவர் உடன் ஆதி லிங்கம் தொடர்பில் இருந்திருக்கிறார். அவர் மூலம் தான் போதை பொருள் கடத்தல் தொழில் ஆதி லிங்கம் ஈடுபட்டு இருக்கிறார்.

- Advertisement -

வரலட்சுமிக்கு அனுப்பிய சம்மன்:

மேலும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் ஆதிலிங்கம் சம்பந்தமாக தகவல்களை சேகரிக்க நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ .ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதில், விசாரணைக்கு நடிகை வரலட்சுமி நேரடியாக ஆஜராகும் படி உத்தரவிட்டார்கள். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .

வரலக்ஷ்மி கொடுத்த பதில்:

அது மட்டும் இல்லாமல் தற்போது வரலட்சுமி ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று என்.ஐ .ஏ அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக என்.ஐ .ஏ அதிகாரிகள் கூறி இருப்பது, விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்காக தான் இலங்கையை சேர்ந்த கும்பல் போதைப்பொருள் ஆயுத கடத்தலில் ஈடுபட்டிருக்கிறது. தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

-விளம்பரம்-

என்.ஐ .ஏ அதிகாரிகள் கூறியது:

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் உள்ளவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? இவர்களுக்கு எவ்வளவு ஆதிலிங்கம் பணத்தை கொடுத்து இருக்கிறார். இந்த பணத்தை ஆதி லிங்கம் சட்டவிரோதமாக எப்படி மாற்றினார் என்ற கோணத்தில் தான் விசாரணையை நடத்த இருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் வரலக்ஷ்மி. இவர் நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

வரலக்ஷ்மி நடிக்கும் படங்கள்:

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வரலக்ஷ்மி நடிப்பில் வெளியாகியிருந்த காட்டேரி, யசோதா படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement