லியோக்கு மட்டுமல்ல, இனி எந்தப் படத்திற்கும் ஸ்பெஷல் ஷோ கிடையாது – விஷால் சொன்ன காரணம் இதோ.

0
815
- Advertisement -

லியோ மட்டும் இல்லை இனி எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகள் கிடையாது என்று விஷால் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் லியோ படம் குறித்த அப்டேட்டுகள் தான் வைரலாகி கொண்டு வருகிறது. மாஸ்டர் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதனால் படத்தினுடைய ப்ரமோஷன் பணிகள், போஸ்டர் பணிகள் எல்லாம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மக்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக நடத்த வேண்டாம் என படக்குழு முடிவெடுத்திருந்ததாக கூறப்பட்டது.

- Advertisement -

லியோ படம்:

இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும், லியோ ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை லியோ படத்திற்கு இந்தியா, வெளிநாடுகளிலும் முன் பதிவு டிக்கெட் கோடி கணக்கில் விற்று இருப்பதாக கூறப்படுகிறது.

அரசாங்க உத்தரவு:

மேலும், தமிழகம் முழுவதும் லியோ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. அதோடு ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் திரையிட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அனைத்து திரையரங்களிலும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்திருக்கிறது. இதை கண்காணிக்க தனிக்குழு ஒன்று அமைப்பதாக அரசாங்கம் கூறியிருந்தது. ஏற்கனவே துணிவு, வாரிசு போன்ற படங்களுக்கு அனுமதி இல்லாமல் அதிகாலை காட்சிகளை திரையிட்ட திரையரங்களின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அபதாரம் விதித்திருந்தது.

-விளம்பரம்-

விஷால் அளித்த பேட்டி:

இனி இந்த மாதிரி எந்த திரையரங்கம் செய்தாலும் சராமாறியாக நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றம் அறிவித்திருந்து. இந்த நிலையில் இது தொடர்பாக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் பேட்டியில், ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் தான். காலை 9 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை மட்டுமே திரையிடப்படும் என்பது அரசினுடைய விதிமுறை. அரசின் இந்த விதிமுறையை நாம் எதுவும் செய்ய முடியாது. அதன்படி தான் திரைப்படம் வரும். இனி திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகள் இருக்காது. ரசிகர்கள் அதை புரிந்து கொள்வார்கள்.

லியோ பட நிறுவனம் வைத்த கோரிக்கை:

மற்றபடி திரையரங்கை பொறுத்த வரை டிக்கெட் விற்பனையில் அதிக விலை வைத்து விற்கும் முறைகேடுகள் ஏதுமில்லை என்று பேசி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க லியோ படத்திற்கு ஸ்பெசல் ஷோ அனுமதிக்கப்பட வேண்டும் என்று படக்குழு சார்பாக நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி இதுகுறித்த முடிவை நாளை அறிவிக்க இருக்கிறார். மேலும், நாளை லியோ படத்திற்கு வர இருக்கும் தீர்ப்பு பாசிட்டிவாக தான் கிடைக்கும் என்றெல்லாம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement