‘ஓப்பன்ஹெய்மர்’ படத்தின் நெருக்கமான காட்சியில் பகவத்கீதை வரிகள் – சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

0
1394
- Advertisement -

ஓபன்ஹெய்மர் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு மத்திய அமைச்சர் போட்டு இருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட்டிலேயே பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஓபன்ஹெய்மர் .

-விளம்பரம்-

இந்த படம் உலகம் முழுவதும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படம் அணுகுண்டின் தந்தை டாக்டர் ஓபன்ஹெய்மரின் பயோபிக் படமாக உருவாகி உள்ளது. முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகு அதே தலைமுறை மக்கள் இரண்டாம் உலகப் போரை சந்தித்தார்கள். அதற்குப் பின்னர் எந்த தலைமுறையும் உலகப்போரை சந்திக்கவில்லை. மேலும், இந்த உலகப் போர் வல்லரசு நாடுகள் உட்பட பல நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் இந்த இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நடந்த சம்பவம் தான்.

- Advertisement -

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தில் ஜப்பானின் போர் விமானங்கள் அக்கிராமத்தை ஆக்கிரமித்து இருந்தது. இதனால் அமெரிக்கா கோவப்பட்டு அணுகுண்டுகளை கையில் ஏந்தி வீசியது. அப்போது ஹிரோஷிமா, நாகசாகி என ஜப்பான் நகரங்களின் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டது. அதனுடைய விளைவு இன்றைக்கும் இருக்கின்றது. மேலும், இந்த நாசமான அணுகுண்டுகளின் தலைவர் ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர். இவர் உருவாக்கிய அணுகுண்டுகளால் தான் இந்த போர் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும், இரண்டாவது உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா உடைய காலில் ஜப்பான் விழுந்ததால் தான் இந்த இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதற்கு முழுக்க முழுக்க காரணம் ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் தான். இவரை கதையின் நாயகனாக கொண்டு படத்தை உருவாக்கி இருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இந்த படம் தயாராகி இருக்கிறது. மேலும், இந்த படத்தில் உலகை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன் என்ற பகவத் கீதை வரி இடம் பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அதுவும் இந்த வரிகள் படத்தினுடைய கதாநாயகனும் கதாநாயகியும் நெருக்கமாக இருக்கும் போது தான் வருகிறது. தற்போது இது தொடர்பாக தான் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. மேலும், ஏற்கனவே இந்திய ரசிகர்களுக்காக இந்த படத்தில் இருந்து பல காட்சிகள் துண்டிக்கப்பட்டு தான் வழங்கப்பட்டது. இருந்தாலும், ஹீரோயினி ஹீரோவும் நெருக்கமாக இருக்கும் சில காட்சிகள் எடுக்காமலேயே வெளியிடப்பட்டது. இது குறித்து பலருமே சென்சார் வாரியத்தை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதில் அவர், பகவத் கீதை வரும் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Advertisement