மன்சூர் பிரச்சனையில் திரிஷாவிற்கு வந்த புது தலைவலி – போலீசார் அனுப்பிய கடிதம்.

0
532
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான்-திரிஷா குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் மன்சூர் அலிகான், லியோ படத்தில் பலாத்கார காட்சிகள் இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை.

-விளம்பரம்-

இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் மீது புகார்:

பின் இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று செய்து கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின் இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தார்கள். பின் விசாரணையில் மன்சூர் அலிகான் தன்னுடைய தரப்பு நியாயத்தை கூறியிருக்கிறார்.

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

அதன் பின் பேட்டியில் மன்சூர் அலிகான், உடல்நிலை சரியில்லை என்றாலும் நான் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறேன். முன் ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றிருக்கிறேன்.
பயந்து போய் தலைமறைவாகும் ஆள் நான் இல்லை. நான் திரிஷா என்பவரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசவில்லை. ஒரு நடிகையாக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். போலீசார் திரிஷா குறித்து அவதூறாக பேசிய வீடியோ குறித்து என்னிடம் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். நான் வீடியோவை முழுதாக பாருங்கள் என்று அறிவுருத்தினேன்.

-விளம்பரம்-

மீண்டும் சர்ச்சை கிளப்பிய மன்சூர்:

என்னை பழிவாங்கும் நோக்கில் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனை அடுத்து மன்சூர் அலிகான் அவர்கள் மன்னித்துவிடு என்ற ஒரு அறிக்கையும் வெளியிட்டு இருக்கிறார். இதனால் இந்த விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்று நினைக்கப்பட்டு இருக்கும் நிலையில் மீண்டும் மன்சூர் அலிகான் பதிவிட்டு இருக்கும் பதிவுதான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

திரிஷாவுக்கு அனுப்பிய சம்மன்:

அதாவது, மரணித்து விடு என்ற வார்த்தையை தான் நான் கூறினேன். பிஆர்ஓ அப்படி அச்சடித்து விட்டார் என்று பதிவிடுகிறார். பின் இவர் பத்திரிகையாளர்களை சந்தித்து, நான் என்ன பேசினேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் யாரோ என்னை தவறாக சித்தரிக்கும் விதத்தில் இப்படி ஒரு வீடியோவை எடிட் செய்து போட்டு இருக்கிறார்கள். என் மீது வீண்பழி சுமத்திய திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக நடிகை திரிஷாவிடம் விளக்கம் கேட்க ஆயிரம் விளக்கு போலீசார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதை திரிஷா நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார் என்று கூறி இருக்கிறார்.

Advertisement