இன்று இந்திய அளவில் ஃபேமஸ் ஆக இருக்கும் பிரபுதேவா தன்னுடைய முதல் பாடலுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
546
prabhu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் பிரபுதேவா. இவர் நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளர், திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர்களும் நடன இயக்குனர்கள் ஆவார். மேலும், இவருடைய வேகமாக நடனமாடும் திறமைக்காக இவரை இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று அனைவரும் அழைக்கிறார்கள். இவர் நடன ஆசிரியராக சினிமா உலகில் நுழைந்து 1989 ஆம் ஆண்டில் வெளியான இந்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிகராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், பிரபுதேவா படம் என்றாலே அனைவரும் எதிர்பார்ப்பது அவருடைய நடனத்தை தான். அதோடு பிற நடிகர்களைக் காட்டிலும் பிரபு தேவா தன்னுடைய படங்களில் கடினமான ஸ்டெப்களை போடுவார். ஆனால், அவர் ஆடும்போது பார்க்கும் நமக்கு சாதாரணமாக தெரியும். அவர் போடும் எல்லா ஸ்டெப்களுமே ரொம்ப கஷ்டம் தான்.

- Advertisement -

இப்படி பயங்கரமாக கலக்கி கொண்டு இருந்த பிரபுதேவா தன்னுடைய சொந்த பிரச்சனையால் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி நடிக்காமல் இருந்தார். பின் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில் பிரபுதேவா மிக குறைந்த அளவில் சம்பளம் வாங்கி நடித்து இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், 500 ரூபாய் சம்பளம் பெற்று பிரபுதேவா படத்தில் நடித்திருக்கிறாராம். மணிரத்தினம் இயக்கிய மௌன ராகம் என்ற படத்தில் பணிவிழும் இரவு என்ற ஒரு பாடல் வரும். அந்த பாடலில் சில காட்சிகளில் பிரபுதேவா வருவார். அதில் நடித்ததற்காக மணிரத்தினம் பிரபுதேவாவிற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார். தற்போது பிரபுதேவா படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement