ஒரு ஆதர் லவ் என்ற ஒரே ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை ப்ரியா வாரீர். தற்போது ஸ்ரீதேவி பங்களா என்ற புதிய இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்ரீதேவியின் வாழக்கை வரலாற்றில் நடிக்கும் பிரியா வாரீர் ட்ரைலரில் மது பிடித்தல், குறைவான அடையில் நடித்தல் போன்ற காட்சிகள் இடம்பெற்றது. மேலும், ஸ்ரீதேவி குளியல் தொட்டியில்இறந்துகிடப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றது. ப்ரியா வாரீயர் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிப்பதை பலரும் எதிர்த்து வந்தனர்.
இந்நிலையில் லவ்வர்ஸ் டே என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்குபெற்ற பிரியாவின் அழகோ, சிரிப்போ, அவரின் கண் சிமிட்டலோ புகைப்படக் கலைஞர்களைக் கவரவில்லை. மாறாக, அவரது இடது மார்புக்கு மேல் பகுதியில் அவர் வரைந்து வைத்துள்ள ‘டாட்டூ’தான் பலரையும் பார்க்க வைத்தது.
‘கார்ப் டயம்’ என கையால் எழுதியதைப் போன்ற அந்த டாட்டூ ஒரு லத்தீன் சொற்றொடர் ஆகும். அதற்கு, “எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல், இப்போதைய கணத்தின் இன்பத்தை அனுபவியுங்கள்” என்று அர்த்தம் ஆகும்.