சமீபத்தில் பேட்டியளித்த ராதாரவி இந்த படத்தை பற்றி கூறுகையில் இந்த படத்தில் நான் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளேன்.மேலும் அரசியல்வாதியாக நடித்துள்ள தனக்கும் விஜய்க்கும் இந்த படத்தில் அடிக்கடி போட்டி சண்டை வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.அதில் அவர் என்னை மீறி வருவர்"என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய்க்கு அரசியல் சம்மந்தபட்ட சில வசனங்களும் ,காட்சிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது என்று நமது பக்கத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் தற்போது ராதாரவி கூறியுள்ளதை வைத்துபார்க்கும் போது இந்த படத்தின் கதை அரசியல் சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய் அரசியலுக்கு வருதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.சினிமாReading time · 1 min





